தை மாதத்தில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்

dhanam astrology
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் மாற்றங்களும் மற்ற 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் அந்த வகையில் இந்த தை மாதத்தின் முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசியில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். இதன் மூலம் மேஷம் முதல் மீன வரை 12 ராசிகளுக்கும் பலவிதமான மாறுதல்கள் ஏற்படும்.

அந்த மாறுதலுக்கு ஏற்ப யார் யார் எந்த மாதிரியான தானங்களை செய்தால் அவர்களுக்கு நன்மைகள் பயக்கும் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த தானங்களை செய்வதன் மூலம் அஷ்டலட்சுமி களின் அனுகிரகத்தையும் 12 ராசிக்காரர்களும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தை மாதத்தில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் தங்களுடைய வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் கடன் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும் மஞ்சள் நிற இனிப்புகளை தானமாக தர வேண்டும். இதை வீட்டிலே தயார் செய்து மாலை வேலையில் பசுவுக்கு தானமாக தர வேண்டும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசியின் அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷமும் பணவரவும் அதிகரிக்க மாலை வேளையில் பசுவிற்கு பச்சரிசி வெல்லம் கலந்து தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

புதன் பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும். அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லாதவர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

கடகம்

கடக ராசி காரர்கள் சந்திர பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்டவர்கள். இவர்கள் அச்சு வெல்லத்தை வாங்கி இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்து வர வேண்டும் இதை எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த ராசிக்காரர்கள் செய்யலாம்.

- Advertisement -

சிம்ம ராசி

சூரியனை ராசியின் அதிபதியாக கொண்டு சிம்ம ராசிக்காரர்கள் அச்சு வெல்லம் நெய் கலந்த இனிப்புகளை ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து தாயாரின் அனுகிரகத்தோடு பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம்.

கன்னி ராசி

புதன் பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்டு கன்னி ராசிக்காரர்கள் துளசிக்கு தண்ணீர் ஊற்றி, அகல் விளக்கு ஏற்றி வழிபட கடன் பிரச்சனை நீங்கும் சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு உளுந்து வடை தானம் செய்வதன் மூலம் சிக்கல்கள் நீக்குவதோடு வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

ராசி சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் கோதுமை மாவில் நெய் சர்க்கரை கலந்த உணவுகளை தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் கடன் பிரச்சனைகள் நீங்கி திடீர் பணவரவு பெறக் கூடிய யோகத்தை பெறலாம்.

விருச்சகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சக ராசி காரர்கள் இனிப்பு உளுந்து வடையை தானமாக கொடுக்கலாம். இதன் மூலம் பிரச்சனைகள் இன்னல்கள் நீங்கி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும்.

தனுசு

சூரிய பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் இல்லாதவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுக்க வேண்டும் இதன் மூலம் உங்களுடைய தீராத பிரச்சனைகள் கடன் பெறுவதுடன் வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

சனி பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள் எள் வெல்லம் சேர்த்து எள்ளுருண்டையை தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் சந்தோஷம் நிம்மதி அதிகரித்து கடன் தொல்லை நீங்கும். பொருளாதார நிலையும் மேம்படும்.

கும்பம்

சனி பகவானை ராசியின் அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் வியாழன் கிழமைகளில் இனிப்பு வகையில் லட்டை தானமாக கொடுக்க வேண்டும். இத்துடன் பசும்பால் வாங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுத்து வர வேண்டும். இதன் மூலம் கடன் பிரச்சனைகள் நீங்குவதுடன் செல்வ வளம் அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். அத்துடன் ஞாயிற்றுக்கிழமையில் கோதுமையால் செய்த சப்பாத்தியை பசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் கடன் நீங்கி பண வருமானம் அதிகரிக்கும்.

12 ராசிக்காரர்களும் இந்த தை மாதத்தில் என்னென்ன தானங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த தானங்களை செய்வதன் மூலம் ஏற்படவிருக்கும் இன்னல்கள் நீங்கி சுகமாக வாழலாம் இத்துடன் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குருவின் அருள் பெற்ற மூன்று ராசிகள்

தானங்களை கொடுக்க வேண்டிய நாள் குறிப்பிடாத ராசிக்காரர்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தானங்களை கொடுக்கலாம். ஆனால் இந்த நாளில் தான் தானம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அந்த நாளில் கொடுக்கும் போது தான் அதற்கான பலன் அதிகரிக்கும். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் பயன்படுத்தி நல்ல பலனை பெறுங்கள்

- Advertisement -