தை செவ்வாய் முருகன் வழிபாடு

murugan valipadu
- Advertisement -

நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீருவதற்கு நாம் முருகப்பெருமானை வழிபட வேண்டும். அப்படிப்பட்ட முருக பெருமானுக்குரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அதுவும் தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை நாம் செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளால் நம் வாழ்வில் நல்ல வளம் பெருகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு தை செவ்வாயில் முருகப்பெருமானை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவரே முருகப்பெருமான். மேலும் சக்தியின் அம்சமான வேலை தன் கையிலேயே வைத்திருக்கக் கூடியவராகவும் திகழ்கிறார். அதனால் தான் முருகப்பெருமானை வழிபட்டால் சிவ சக்தியை வழிபடுவதற்கு சமமான பலனை பெற முடியும் என்று பல ஆன்மீக சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான முருகப்பெருமானை நாம் முழுமனதுடன் நம்பி வழிபடும் பொழுது அவர் நமக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குவார்.

- Advertisement -

பொதுவாக குழந்தை பேறு இன்மை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள், சொந்த வீடு வாங்குவது அல்லது விற்பது போன்ற பல காரியங்களுக்காக முருகப்பெருமானை நாம் வழிபடுவது உண்டு. இந்த தைச் செவ்வாயில் முருகப்பெருமானை வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல் முருகப் பெருமானின் அருளால் நல்ல முன்னேற்றமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.

செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தையோ அல்லது விக்கிரகத்தையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கு மலர்களை சூட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து பிள்ளையாரிடம் முருகனின் வழிபாட்டில் எந்த தடையும் வரக்கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மாலை 6 மணிக்கு முருகப்பெருமானிற்கு முன்பாக அறு முக்கோண கோலம் அதாவது நட்சத்திர கோலம் போட வேண்டும். அந்த ஆறு முக்கோணங்களில் ஆறு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். முருகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக ஆறு வெற்றிலை, ஆறு கொட்டைப்பாக்கு, ஆறு செவ்வாழை பழங்களை வைக்க வேண்டும். இயன்றவர்கள் பாசிப்பருப்பு பாயாசத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

பிறகு முருகப்பெருமானின் படத்திற்கு ஆறு மலர்களை வைக்க வேண்டும். இப்படி வைத்து விட்டு முருகப் பெருமானின் மந்திரமான சரவணபவ என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை 6 முறையோ அல்லது 18 முறையோ அல்லது 108 முறையோ கூறலாம். மந்திரங்களை கூறி முடித்து விட்ட பிறகு அகத்திய பெருமான் அருளிய இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

“ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே சண்முகனே சடாசரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் க்ரீம் வேல் காக்க ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை மனதார கூறிவிட்டு முருகப் பெருமானுக்கு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

இந்த முறையில் தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை நினைத்து இப்படி வழிபாடு மேற்கொண்டு வர நாம் நினைத்த காரியம் நடைபெறும் வேண்டிய வரம் கிடைக்கும். முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்

- Advertisement -