தைப்பொங்கல் 2023! நாளை இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால், உங்களுடைய குடும்பத்தில், பொங்கல் பொங்கி வழிவது போல சந்தோஷமும் பொங்கி வழியும்.

pongal
- Advertisement -

பண்டிகை நாட்கள் என்றாலே நம்முடைய மனது முழுவதும் சந்தோஷம் நிறைவாக இருக்கும். அதிலும் இந்த தைத்திருநாள் வந்து விட்டால், நான்கு நாட்கள் சொந்த பந்தங்கள் சேர்ந்து, அவ்வளவு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் இந்த தைப்பொங்கல், திருவிழா போல கொண்டாடப்படும். இந்த வருடம் தைப்பொங்கல் 15.1.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கின்றது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்த தைத்திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். சூரியன் இல்லை என்றால் இந்த பூலோகத்தில் ஒரு சின்ன உயிர் கூட வாழ முடியாது. நமக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுத்து, வாழ்வாதாரத்தை கொடுக்கக்கூடிய அந்த சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்த வருட தைப்பொங்கல் வந்திருப்பதால் இது சிறப்பு வாய்ந்த பொங்கலாக கருதப்படுகிறது.

இந்த வருட தைத்திருநாள் அன்று வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் நல்லது, மிக மிக எளிமையான முறையில் இந்த தைத்திருநாளை எப்படி வழிபாடு செய்து கொண்டாடுவது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தைப்பொங்கல் வைக்க வேண்டிய நேரம் | Pongal vaikka nalla neram 2023
பொங்கல் என்றாலே அது சூரிய பகவானுக்காக கொண்டாடப்படக்கூடிய பண்டிகை. ஆகையால் சூரிய பகவான் உதயமாகும் போது, சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல், என்ற வார்த்தைகளை சொல்லி வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.

அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை 5.00 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கி விட வேண்டும். அப்படி என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் 4.00 மணிக்கே எழுந்து குளித்து இருக்க வேண்டும். உங்களுக்கு வசதி இருந்தால் மொட்டை மாடியில் அல்லது வீட்டுக்கு வெளி புறத்திலோ சாணம் மெழுகி அதன் மேலே பச்சரிசி மாவால் கோலம் போட்டு, செங்கற்களை அடுக்கி விறகு மூட்டி மண்பானை அல்லது பித்தளை பானை அல்லது வெங்களப்பானை இப்படி உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ அந்த பானையை வைத்து அதில் பொங்கல் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதிகாலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் வைக்கலாம். அந்த நேரத்தையும் தவற விட்டவர்கள் 10.30 முதல் 11.30 மணிக்குள் வைக்கலாம். ஒரு வேளை உங்களால் காலையில் பொங்கல் வைக்க இயலவில்லை என்றால் மாலை 3.30 முதல் 4.30 மணிக்குள் பொங்கல் வைக்கலாம்.
இதையும் பாருங்க: பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில்

பொங்கல் வெந்து தயாராகுவதற்கு ஒரு மணி நேரம் எடுக்கும். காலை 6.00 மணிக்கு சூரியன் உதயமாகும் போது தயாரான பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து, சூரிய பகவானுக்கு நன்றிகள் தெரிவித்து, வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளும் விவசாயமும் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரையும் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்று சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பொங்கல் வைக்கக்கூடிய இந்த இடத்தில் வழக்கம் போல மஞ்சள் கொத்து, காய்கறிகள், கரும்பு, இவைகளை எல்லாம் படைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அந்த பொங்கலை சாப்பிடுவது வழக்கம்.

- Advertisement -

வெளியிடங்களில் எல்லோராலும் நெருப்பு மூட்டி பானையில் பொங்கல் வைக்க முடியாது. வீட்டிற்கு உள்ளேயே கேஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பதாக இருந்தாலும் சரி, குக்கரில் பொங்கல் வைக்காதீங்க. உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் பொங்கல் வைத்து பொங்கல் தயாரானதும் அதை வாழை இலையில் வைத்து நிவேதியமாக, சூரியன் உதயமாகும் போது சூரியனுக்கு அந்த பொங்கலை படைத்து பூஜை செய்வது சிறப்பு.

அதிகாலை வேலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வதை சரியான நேரம். ஆனால் இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் மதியம் 12.00 மணிக்கு முன்பாக உங்களால் எப்போது முடியுமோ அப்போது பொங்கல் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைக்கலாம் தவறு கிடையாது.

பொங்கல் வைக்கும் முறை:
சில பேர் வீட்டில் சர்க்கரை பொங்கல் மட்டும் வைப்பார்கள். சில பேர் வீட்டில் இரண்டு பொங்கல் வைப்பார்கள். சர்க்கரை பொங்கல், வெள்ளை பொங்கல் என்று இரண்டு பொங்கல் வைப்பது வழக்கமாக இருக்கும். அதாவது பொங்க சோறு என்று வெறும் பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக பால் விட்டு வேக வைத்து சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கமாக இருக்கும். உங்களுடைய வீட்டில் நீங்கள் எப்படி பொங்கல் வைப்பீர்களோ, உங்கள் வீட்டில் எது வழக்கமாக இருக்கிறதோ, அதை உங்கள் விருப்பம் போல வைத்துக் கொள்ளலாம். இத்தனை பொங்கல் தான் வைக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

அதேபோல இந்த பொங்கல் தைத்திருநாளில் காய்கறிகளை எல்லாம் மொத்தமாக போட்டு செய்கின்ற குழம்பு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். நிறைய பேர் வீடுகளில் வெறும் வெள்ளை பொங்க சோறு மட்டும் வைத்து, அந்த பொங்க சோறுக்கு மேலே எல்லா காய்கறிகளையும் சேர்த்து குழம்பு ஊற்றி சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். குடும்பத்தோடு இப்படி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தனை மன நிறைவை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பொங்கல் ஸ்பெஷல் காய் குழம்பை, நாட்டு காய்கறிகளை வைத்து அசல் கிராமத்து சுவையில் ரொம்ப சுலபமா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாமா? பொங்கலுக்கு நீங்களும் இந்த குழம்பை உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க.

இந்த தைத்திருநாள் அன்று எப்படி சொந்த பந்தங்களும், ஊர் உறவும் சேர்ந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடுகிறதோ, அதேபோல இந்த வருடம் முழுவதும் அவர்களுக்கு சந்தோஷம் பொங்கி வழிய வேண்டும் என்ற வேண்டுதலை சூரிய பகவானிடம் வைத்து, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -