தலை வாரும் பொழுது பெண்கள் இப்படி செய்தால் உங்களிடம் மகாலட்சுமி கடாட்சம் எப்போதும் இருக்குமாம் தெரியுமா?

hair-comb-lakshmi
- Advertisement -

தலைமுடி என்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா? வசியத்தில் முதலிடம் தலைமுடிக்கு தான் உண்டு. நாம் அழிந்தாலும் நம்மை விட்டு அழியாத இந்த தலைமுடி சனீஸ்வர பகவானின் ஆதிக்கத்தில் உள்ளது. சனீஸ்வர பகவான் எளிதாக நம்மை பிடிக்க இந்த தலைமுடியும் ஒரு காரணமாக அமைந்து விடும். எனவே இத்தகைய தலை முடியை வாரும் பொழுது பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்கிற சுவாரஸ்ய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

hair-color

முந்தைய காலங்களில் எல்லாம் தலை முடியை வாருவதற்கு பிளாஸ்டிக் சீப்புகளை பயன்படுத்த மாட்டார்கள். மரத்தால் ஆன சீப்புகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். வேப்ப மரம், கருங்காலி மரம் போன்ற விசேஷமான மரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சீப்புகளை பயன்படுத்தி தலை வாரும் போது நமக்கு தலைமுடி பிரச்சனைகள் வராது என்பதும் நம்பிக்கை.

- Advertisement -

இப்போது அதிகம் பிளாஸ்டிக் சீப்புகளை பயன்படுத்துவதால் தலைமுடி பிரச்னைகளும் தலைதூக்கும் துவங்கிவிட்டது. தலைமுடி வாரும் பொழுது எப்பொழுதும் நின்று கொண்டு வாரக் கூடாது என்பது தான் சாஸ்திரம். நின்று கொண்டு தலை முடியை வாரும் பொழுது ஆங்காங்கே கீழே விழும் முடிகளை நாம் கால்களால் மிதித்து விடக்கூடும். உச்சந்தலையில் தலைமுடியில் வாசம் செய்யும் மகாலட்சுமியை நாம் மிதிக்கும் பொழுது நம்மிடம் இருக்கும் லக்ஷ்மி கடாட்சம் நம்மை விட்டு சென்றுவிடும் என்பது நியதி.

Hair

உச்சந்தலையில் நேர் வகிடு எடுத்து வாரும் பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உச்சந்தலையில் தான் உயிர் நாடி இருக்கும். நீங்கள் பச்சிளம் குழந்தைகளின் உச்சந்தலையை பார்த்தால் தெரியும். உச்சந்தலையில் ஒரு இடத்தில் மட்டும் மிகவும் மென்மையாக உயிர் நாடி துடித்துக் கொண்டிருக்கும். உயிர் நாடி பெண்களின் தலையில் நேர் வகிடு எடுத்து வரும் பொழுது நேர்மறை சக்தியை பெறுகிறது. இதனால் அவர்களுடைய எண்ணங்களும், சிந்தனைகளும் நல்முறையில் அமையும்.

- Advertisement -

எவ்விதமான துஷ்ட சக்திகளும் நேர் வகிடு எடுத்து வாரும் பெண்களை அணுகுவதில்லை. நின்று கொண்டு வாரும் பொழுது தலைமுடி வீட்டில் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கும். இப்படி தலைமுடியை அலைய விட்டால் நம்முடைய வாழ்க்கையும் அலையும்படி ஆகி விடும் என்பது நம்பிக்கை. எனவே தலை முடி விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தலை முடியை வாரும் பொழுது அமர்ந்து கொண்டு தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து நேர் வகிடு எடுத்து படிய, இறுக வாரிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மிடம் இருக்கும் மகாலட்சுமி கடாட்சம் நம்மிடமே இருக்கும்.

hair-growth

அமர்ந்து கொண்டு வாரிய பின்பு கீழே விழும் முடிகளை எல்லாம் ஒன்றாக திரட்டி அதனை ஒரு பேப்பரில் மடித்து யாருடைய கண்களுக்கும் தெரியாதபடி குப்பையில் போட்டு விட வேண்டும். தலைமுடி, நகம், நம்முடைய உடை, நம் கால் பட்ட மண் போன்ற பொருட்களைக் கொண்டு தான் வசியம் செய்வது உண்டு. எனவே இத்தகைய வசியம் நமக்கு ஏற்பட்டு விடாமல் இருக்க நம்முடைய தலைமுடியை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஆங்காங்கே போட்டு விட்டு செல்வது, வாசலில் நின்று தலை வாருவது, வீட்டிற்குள் தலை வாருவது, கொஞ்சம் கூட எண்ணெய் வைக்காமல் தலை வாருவது போன்ற விஷயங்களை எல்லாம் நீங்கள் செய்வதாக இருந்தால் இருக்கும் மகாலட்சுமி கடாட்சம் நிச்சயம் உங்களை விட்டு சென்றுவிடும்.

- Advertisement -