தங்க நகை அதிகமாக சேர நெல்லிக் கொட்டை பரிகாரம்

gold purchase
- Advertisement -

தங்க நகையை அணிந்து கொள்ள வேண்டும் தங்க நகையை வாங்கி சேர்க்க வேண்டும் போன்ற ஆசைகள் இன்று எல்லோர் மனதிலும் உண்டு. இதில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு இல்லை. முன்பெல்லாம் பெண்கள் தான் தங்க நகை அதிகமாக விரும்பி அணிவார்கள். இப்போதைய காலக்கட்டத்தில் ஆண்களும் தங்கத்தை அதிகமாக தொடங்கி விட்டார்கள். இதனால் தங்கத்தின் மீது அனைவருக்கும் ஈர்ப்பு அதிகரித்து விட்டது என்பது தெரிகிறது.

இதெல்லாம் சரி தங்கம் இன்று விற்கும் விலையில் எங்கே தங்கம் வாங்குவது என்று கேள்வியும் புரிகிறது. தங்கம் வாங்கும் ஆசை இருப்பவர்கள் அந்த யோகத்தை வழங்கக் கூடிய மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வழங்கும் போது தங்கம் சேர்வதற்கான யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவை பார்க்கலாம்.

- Advertisement -

தங்கம் சேர பரிகாரம்

தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். அந்த வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். வெள்ளிக்கிழமையில் எப்பொழுதும் போல பூஜை அறையில் சுத்தம் செய்து விட்டு படங்களை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்ல வாசம் மிக்க மலர்களை சூடி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஐந்து நெல்லிக்கனியின் கொட்டைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நெல்லிக்கனி மகாலட்சுமி தாயாருக்கு உகந்ததாகவும், குபேரருக்கு உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி நெல்லிமரத்தில் விஷ்ணு பகவான் வாசம் செய்வதாகும் ஐதீகம் உண்டு. ஆகையால் நெல்லிக்கனி இந்த பரிகாரத்திற்கு மிகவும் உகந்தது.

- Advertisement -

அடுத்து நகை வைக்கும் பெட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீல நிறத்தில் இருக்க வேண்டும். அடுத்ததாக ஒரு மஞ்சள் நிற பேப்பர் அதாவது தங்க நிறத்தில் இருக்கக் கூடிய பேப்பர் கடைகளில் விற்கும் வாங்கிக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விட்டு வாசம் மிக்க மலர்களை சூடி இந்த நெல்லிக்காய் கொட்டைகளை தாயாரின் பாதத்தில் வைக்க வேண்டும்

அதன் பிறகு இரண்டு கைகளையும் கூப்பி அன்னையை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தங்க நகை சேர வேண்டும் என்ற வேண்டுதலை மிகவும் அழுத்தமாக கேளுங்கள். இப்போது ஒரு நீல நிற நகைப் பெட்டி அதில் வைக்க மஞ்சள் நிற பேப்பர் உங்களிடம் ஏதேனும் நகை இருந்தால் அதை இந்த நகை பெட்டியில் வைத்து விடுங்கள். சிறிய குண்டுமணி தங்கமாக இருந்தாலும் பரவாயில்லை வைக்கலாம்.

- Advertisement -

இப்போது தாயாரின் பாதத்தில் வைத்து வணங்கிய நெல்லிக்கனியின் கொட்டைகளை இந்த அட்டைப் பெட்டியில் வைத்த பிறகு மறுபடியும் தாயாரை ஒரு முறை நன்றாக பிரார்த்தனை செய்து கொண்டு இந்த நகைப் பெட்டியை உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். இந்த பொருள் இருக்கும் இடத்தில் தங்க நகை ஈர்ப்பு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீங்க தீப பரிகாரம்

இந்த நெல்லிக்கனியில் கொட்டைகளை வைத்து விட்டு தங்கம் தேடி வரும் என்ற எண்ணம் கூடாது. நம்முடைய உழைப்பு முயற்சி அனைத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு இந்த துணையாக இருக்கும் விரைவில் தங்கம் வாங்கக் கூடிய யோகம் கிடைக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -