இன்று சொர்ண தேவதைக்கு விருப்பமான இந்த மலரை வைத்து மகாலட்சுமி தாயாரை பூஜித்தால் வீட்டில் தங்கம் மடமடவென்று சேர்வதோடு அடகில் இருக்கும் தங்க நகையும் விரைவில் வீடு திரும்பி விடும்.

thangam sera
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணத்தை சேர்ப்பது எப்படி அத்தியாவசியமாக இருக்கிறதோ அதே போல தங்க நகைகளை சேர்ப்பதும் மிகவும் அத்தியாவசியமானதாகவே கருதப்படுகிறது. ஆனால் தங்கத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும் அனைவராலும் இதை சேர்க்க முடிவதில்லை. ஒரு சிலரால் வாங்கவே முடியாமல் துன்பப்படுவார்கள். ஒரு சிலர் வாங்கிய நகை கையில் இல்லாமல் உடனே அடமானத்திற்கு சென்று விடும். ஒரு சிலர் வீட்டில் தங்க நகையே தாங்காது இப்படியான பிரச்சனைகளை சரி செய்வதற்கான எளிய ஒரு பரிகாரத்தை ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் தங்கம் தங்க செய்ய வேண்டியது
இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் தங்கம் சேர வேண்டும் என அதற்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளும் ஆசியும் தேவை அவர்களின் ஆசி கிடைப்பதற்கான நான் வெள்ளிக்கிழமை எனவே இந்த பரிகாரத்தையும் வெள்ளிக்கிழமையில் செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு தங்க அரளி என்று சொல்லப்படும் ஆவாரம் பூ தேவை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்யும் நாளன்று உங்களுடைய வழக்கமான பூஜைகளை செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இதை நீங்கள் வெள்ளி அல்லது பௌர்ணமி அன்று செய்வீர்கள் ஆகையால் வீட்டின் மகாலட்சுமி தாயாரை எப்போதும் போல் வழிபட்ட பிறகு ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த ஆவாரம் பூவை போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிறிய குண்டுமணி தங்கத்தையாவது இதில் போட வேண்டும். தங்கமே எங்களிடம் இல்லயே என்று எண்ணாமல் கடைகளில் மில்லி அளவு தங்கங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். அதில் ஒன்றாவது வாங்கி இதில் போட்டு விடுங்கள்.

இதை தாயாரின் முன்பு வைத்து மனதார வேண்டிக் கொண்டு நீங்கள் வாங்க நினைக்கும் தங்கம் உங்களுக்கு சேர வேண்டும் என்றும் வீட்டில் தங்கம் அதிக அளவில் பெருக வேண்டும் என்றும் அது மட்டும் இன்றி அடமானத்தில் இருக்கும் நகை விரைவில் நாங்கள் திருப்ப வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்தக் கிண்ணத்தில் நீங்கள் எப்பொழுது பூஜை செய்தாலும் அந்த நேரத்தில் எல்லாம் இதற்கும் சிறிது ஓதுபத்தி ஏற்றி காட்டி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கிண்ணத்தை நீங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்டாலும் வழிபடலாம் அல்லது வீட்டில் நகை வைக்கும் இடத்தில் இதை வைத்து வழிபடலாம். ஆனால் இதன் தங்கம் கட்டாயமாக இருக்க வேண்டியது அவசியம் அதே போல் இதை வாரம் வாரம் மாற்றி விடுங்கள். இந்த பூ வாடும் போது அடுத்த வெள்ளி அன்று புதிதாக வேறு பூக்களை அதில் போடுங்கள். பூக்களை மாற்றும் போது கவனமாக தங்க நகைகளை எடுத்து வைத்து விட்டு மாற்றுங்கள்.

இந்த ஆவாரம் பூவானது சொர்ண தேவதைக்கு மிகவும் விருப்பமான பூவாக கருதப்படுகிறது. ஆகையால் இந்த பூவுடன் தங்கம் இருக்கும் பொழுது நீங்கள் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உங்களை தேடி வரும் என்றும் உங்கள் கை விட்டு நழுவிய தங்கம், அடமானத்தில் இருக்கும் நகைகள் கூட மீண்டும் விரைவில் உங்களை வந்து அடைவதற்கான யோகம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு மந்திரத்தை நாம் உச்சரிப்பதால் நம்முடைய வாழ்க்கை நிலையே மாறும். தற்போதைய நிலையில் இருந்து ராஜ நிலையை அடைவதோடு, வேலை வாய்ப்புகளும் சிறந்து விளங்கும்.

தங்கம் பெரும் அளவு சேர்வதற்கு உங்களுடைய உழைப்பையும் முயற்சியும் சேர்த்து சொர்ண தேவதை, மகாலட்சுமி தாயாரின் ஆசியையும் பெற்று நீங்கள் விரும்பிய தங்கத்தை வாங்கி அணிந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -