பணக்கஷ்டம் எல்லாம் தீர, வராத பணம் எல்லாம் வீடு தேடி வந்து சேர, இந்த 1 பொருளை உங்கள் கையோடு வைத்து கொள்ளுங்கள்.

murugar1
- Advertisement -

நிறைய பேருக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய பல கஷ்டங்களில், ஒரு பெரிய கஷ்டம் இந்த பணகஷ்டம். கடன் வாங்கிட்டு திருப்பி தர முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம். இல்லையா கடன் கொடுத்துவிட்டு, அதை வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்போம். வாங்கிய கடனை கொடுக்க முடியாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கொடுத்த கடனை திரும்பவும் வசூல் செய்ய முடியாதவர்களும் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்யலாம். இந்த பதிவில் இரண்டு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. முழு நம்பிக்கையோடு இதை பின்பற்றினால், நிச்சயம் உங்களுடைய பண பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

கொடுத்த பணம் திரும்பவும் வசூல் செய்ய தேர் பரிகாரம்
பெரும்பாலும் எல்லோராலும் இந்த பரிகாரத்தை செய்து விட முடியும். நேராக கிளம்பி பழனி முருகர் கோவிலுக்கு செல்லுங்கள். பழனி முருகப்பெருமானின் தரிசனம் செய்து விடுங்கள். பழனி முருகன் கோவில் பிரகாரத்திலேயே அமர்ந்து பத்து நிமிடம் கண்களை மூடி உங்களுக்கு இருக்கும் பண பிரச்சினை தீர வேண்டும் என்று ஆழ்மனதில் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

மாலை அங்கு தங்க தேர் கோவிலை சுற்றி வரும் அல்லவா. அந்த தங்க தேரை உங்கள் கைகளால் பிடித்து வடம் இழுக்க வேண்டும். எந்த இடத்தில் இருந்து தேர் புறப்பட்டதோ, மீண்டும் அந்த தேர் கோவிலை வலம், வந்து தொடங்கிய இடத்திலேயே அந்த தேர் மீண்டும் வந்து நிற்கும். அதேபோல உங்களுடைய பணமும் உங்களிடமிருந்து வெளியே சென்றதல்லவா, அந்த பணமானது மீண்டும் உங்களிடமே வந்து சேர்ந்து விடும் என்று ஒரு சூட்சமான பரிகாரமாக இந்த பரிகாரம் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது.

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நீங்கள் கொடுத்த பணம் திரும்பவும் உங்களுக்கு கிடைத்துவிடும். நீங்கள் யாரிடமாவது கைநீட்டி கடன் வாங்கி இருந்தால், அந்த கடனை திருப்பித் தர முடியாமல் கஷ்டப்பட்டு இருந்தாலும் இதே பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

நீங்கள் கடனை கொடுத்தவரிடம் திருப்பி கேட்பதற்காக தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டாலும் சரி, அல்லது நேராக சென்று பணத்தை கேட்டாலும் சரி, உங்களுடைய உள்ளங்கைகளில் மூன்று மிளகு வைத்துக்கொண்டு பணத்தைக் கேளுங்கள். நீங்கள் கேட்ட பணம் உடனடியாக உங்கள் வீடு திரும்பி வந்துவிடும். இதே போல தான் கடன் வாங்க வேண்டும். கடன் கிடைக்க வேண்டும் என்று பேங்க் செல்லும்போது உங்களுடைய கையில் 3 மிளகு வைத்துக்கொண்டு சென்று பணம் கேட்டால் நீங்கள் கேட்ட பணம் உடனடியாக உங்கள் கைக்கு வந்து சேரும். (ஹவுசிங் லோன் எஜுகேஷன் லோன் சேங்ஷன் ஆகவில்லை என்ற கஷ்டம் இருக்கும் அல்லவா அதற்கும் இந்த மிளகு பரிகாரம் வெற்றியைத் தரும்.)

இதையும் படிக்கலாமே: உங்க தங்க நகை அடகு மீண்டும் மீண்டும் கடைக்கு செல்லாமல் இருக்க, இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்த பிறகு நகை எடுத்து வைத்து விடுங்கள். உங்க நகை உங்களை விட்டு செல்லவே செல்லாது.

கடன் வாங்கிய இடத்தில் பயங்கரமான நெருக்கடி. ஏதாவது ஒரு வருவாய் வந்தால் தான் அந்த பணத்தை திருப்பித் தர முடியும். அதற்கு இந்த பிசினஸ் சக்சஸ் ஆக வேண்டும். இந்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் அல்லவா. இப்படி பண வரவுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வேண்டும், பணம் கைக்கு வர வேண்டும் என்றாலும் அந்த வேலைக்கு செல்லும்போது உள்ளங்கைகளில் மூன்று மிளகு வைத்துக் கொண்டு சென்றால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலே சொன்ன ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -