வெள்ளிக்கிழமை பூஜையில் இந்த 1 பொருளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தால், மலையளவு தங்கம் வாங்கி குவிக்கும் யோகம் தானாக தேடிவரும்.

gold
- Advertisement -

மலை அளவு குவிந்திருக்கும் தங்கம் நம் வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. கடுகளவுக்காவது தங்கம் வாங்கக்கூடிய லட்சுமி கடாட்சம் நிச்சயம் ஒரு வீட்டில் இருக்க வேண்டும். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தங்க நகை சேர்க்க வேண்டும். திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்கு தங்கம் வாங்க வேண்டும். காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா என்று எந்த ஒரு விசேஷத்தை எடுத்தாலும் அந்த இடத்தில் முதலில் இருக்கக் கூடியது இந்த தங்கம் தான். நம் வாழ்வில் வரக்கூடிய தங்கமான நேரத்தை, தங்க ஆபரணங்கள் போட்டு தகதகவென ஜொலிக்க வைக்க கூடிய தங்கத்தை நம்முடைய வீட்டில் மேலும் மேலும் சேர்ப்பதற்கு செய்ய வேண்டிய சின்ன தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

ஒரு சிறிய வெள்ளி நாணயம் இருந்தால் போதும். நம்முடைய வீட்டில் தங்கத்தை வாங்கி குவிக்கலாம். லட்சுமி படம் போட்ட ஒரு வெள்ளி நாணயத்தை வாங்கிக் கொள்ளுங்கள். மிக சிறிய அளவில், மிக குறைந்த விலையில் கிடைக்கின்றது. இந்த நாணயத்தை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்ய வேண்டும். வழக்கம்போல வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டு பூஜை அறை சுத்தபத்தமாக இருக்கும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பூல தட்டில் ஒரு வெற்றிலியை வைத்து அதன் மேலே வெள்ளி நாணயத்தை வைத்து விடுங்கள். இந்த நாணயத்திற்கு மஞ்சள் அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சளை கொஞ்சமாக பன்னீரில் கரைத்து அந்த தண்ணீரை, இந்த வெள்ளி நாணயத்தின் மேல் ஊற்றி அதன் மேல் ஒரு குங்குமம் போட்டு வைத்து பூ வைத்து மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த பூஜை செய்தால் உங்களுடைய வீட்டில் ஐஸ்வரியும் பெருகும். தங்கம் வாங்கக்கூடிய நேரம் கைகூடி வரும். அடமாடத்தில் இருக்கக்கூடிய தங்கத்தை சீக்கிரம் மீட்டு எடுக்கக்கூடிய நேரம் காலம் வந்துவிடும். வீட்டில் வறுமை என்பதே இருக்காது. இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அந்த வெள்ளி நாணயத்தை தண்ணீரில் கழுவி விட்டு, பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த மஞ்சள் தண்ணீரை உங்கள் வீட்டின் மூளை முடுக்குகளில் தெளித்து விட்டால், வீட்டை பிடித்த தரித்திரம் முழுமையாக நீங்கும். வெற்றிலையை கால்படாத இடத்திலோ அல்லது பசுமாடுகளுக்கும் சாப்பிட கொடுத்து விடுங்கள். அவ்வளவுதான். இந்த பூஜையை தொடர்ந்து உங்களுடைய வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வீட்டின் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: உங்கள் குழந்தைக்கு முதல் முதலில் நகை போட போகிறீர்களா? மறக்காமல் இதை செய்த பின் போடுங்கள். குழந்தைக்கு ஐஸ்வர்யங்கள் மேலும் மேலும் பெருகும்.

வெள்ளி நாணயம் எங்களால் வாங்க முடியாது என்றால் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது வெள்ளி பொருளை கூட தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சில பேர் வீட்டில் வெள்ளி விக்ரகங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வெள்ளி விக்ரகங்களுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வது கூட, ஐஸ்வர்யத்தை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -