வெள்ளிக்கிழமை இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் தங்கம் சேரும்.

mahalashmi7
- Advertisement -

தங்கம் என்று சொன்ன உடனேயே நம்முடைய மனதில் நிச்சயமாக ஒரு சந்தோஷம் வரும். தங்க நகைகளை அணியும் போது ஒரு சந்தோஷம் இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு தங்க நகைகளை வாங்கும் போதும் ஒரு சந்தோஷம் நமக்குள் இருக்கும். தங்கம் என்பது வெறும் ஆபரணமோ, வெறும் உலோகமோ அல்ல. அது ஆன்மீகத்தில் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது.

சில பேருக்கு இந்த தங்கம் வாங்கும் யோகம் இருக்கும். ஆனால் வாங்கிய தங்கத்தை வீட்டில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது. சிலபேர் அதை அடமானம் வைத்து இழப்பார்கள். சில பேர் அதை கவனக்குறைவால் தொலைப்பார்கள். சில பேர் யாரையாவது நம்பி தங்கத்தை கொடுத்து ஏமாந்து இருப்பார்கள்.

- Advertisement -

மேல் சொன்ன பிரச்சனைகளில் ஏதாவது உங்களுக்கு இருந்தாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது எங்களிடம் தங்கம் இல்லை, நிறைய தங்கம் வாங்கி சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

தங்கம் சேர வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரம்

தங்கம் சேர வேண்டும் என்றால் வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் மகாலட்சுமிக்கு மன நிறைவோடு வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக இந்த பூஜையில் ஆவாரம் பூ இருக்க வேண்டும். உங்களுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆவாரம் பூ கிடைத்தாலும் சரி, அல்லது நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த ஆவாரம்பூ கிடைக்கும்.

- Advertisement -

அதை கொண்டு வந்து பூஜைக்கு பயன்படுத்தினாலும் சரி, அது உங்களுடைய சவுக்கரியத்தை பொறுத்தது. ஆனால் ஆவாரம் பூவை வெள்ளிக்கிழமை பூஜையில் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்து வர உங்களுக்கு தங்கம் சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சரி, வெள்ளிக்கிழமை பூஜைக்கு பூஜை அறை தயாராக உள்ளது. ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை போட்டு வச்சிட்டீங்க. அந்த ஆவாரம் பூவில் சின்ன குண்டுமணி தங்கத்தை போடுங்க. நீங்கள் பயன்படுத்தும் தங்கம், மோதிரம், கம்பல், சின்ன திருகாணி, இருந்தால் கூட போதும்.

- Advertisement -

அதை ஆவாரம் பூ கிண்ணத்தில் போட்டுவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது, மகாலட்சுமி தாயை நினைத்து உங்கள் வீட்டில் நிறைய தங்கம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அடகு வைத்த தங்க நகையை மீட்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து ‘ஓம் ஸ்ரீ ஸ்வர்ண தேவதையே ஸ்வாஹா’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.

108 முறை இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். மனம் உருகி வேண்டுதலை வைத்து இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை உச்சரித்தால் இழந்த தங்கத்தை மீட்டெடுக்கலாம். புதிய தங்கத்தையும் வாங்கலாம். இதே போல புதன்கிழமை விளக்கு ஏற்றும் போதும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பெரிய அளவில் பூஜை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

இதையும் படிக்கலாமே: குரு பகவானால் ராஜயோகம் பெறப்போகும் ராசிகள்

புதன்கிழமை வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து இதே மந்திரத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் 108 முறை உச்சரிக்க வேண்டும் அவ்வளவுதான். மேல் சொன்ன வழிபாட்டு முறையை தொடர்ந்து நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தாலே உங்கள் வீட்டில் இருக்கும் தங்கும் சார்ந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -