தன்னம்பிக்கையோடு வாழ, வாழ்க்கையில் நிறைய வழிகள் கிடைக்கும். உங்கள் கையால் பறவைகளுக்கு இந்த ஒரு பொருளை மட்டும் இறையாக போடுங்க.

bird
- Advertisement -

ஒரு மனிதன் வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு முக்கியமான காரணம், அவன் தன்னம்பிக்கையை இழப்பதுதான். வாழ்க்கையில் எவ்வளவு சோதனை வந்தாலும் சரி, தன்னம்பிக்கையை மட்டும் ஒருவர் இழக்கவே கூடாது. தன்னம்பிக்கையும் தைரியத்தையும் இழந்துவிட்டால், முயற்சி செய்வதை விட்டு விட்டுவிடுவோம். முயற்சிகள் இல்லை என்றால் வெற்றி கிடைக்கவே கிடைக்காது. நீங்கள் அடுத்தவர்களை பார்த்து, நம்மால் இப்படி வாழ முடியவில்லையே என்று தாழ்வு மனப்பான்மையில் எந்த முயற்சியும் எடுக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால், இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். நாமும் வாழ்க்கையில் நன்றாக வாழலாம் என்ற எண்ணத்தோடு புதிய முயற்சிகளை செய்து வாழ்க்கையில் வெற்றியும் காண்பீர்கள். வாங்க உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு நகர்த்திச் செல்லும் அந்த ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம் என்ன என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய நமக்கு ஏழு வகையான தானியம் தேவை. கேழ்வரகு, சோளம், கம்பு, இப்படி உங்கள் விருப்பம் போல ஏழு என்ற எண்ணிக்கையில் தானியத்தை வாங்கி ஒன்றாக கொட்டி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் இந்த தானியத்தை உங்கள் கையால் பறவைகளுக்கு இறையாகப் போட வேண்டும். காலை 6:00 மணிக்கு பறவைகள் பறந்து கொண்டே இருக்கும், இறை தேடி. அந்த சமயத்தில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

உங்களுடைய வீட்டு மொட்டை மாடிக்கு சென்று இதை செய்யலாம். அல்லது ஏதாவது கோவில்களுக்கு சென்று இதை செய்யலாம். அல்லது பெரிய பெரிய மரங்களில் பறவைகள் கூடு கட்டி தங்கும். அதிகாலை வேளையில் கீச்சு கீச்சு என்ன சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் அந்த சமயத்தில், அந்த மரத்துக்கு அடியில் சென்று அந்த பறவைகளுக்கு கலந்து வைத்திருக்கும் தானிய வகைகளை இறையாக போடும் வழக்கத்தை கொண்டு வரலாம்.

- Advertisement -

தினமும் பறவைகளுக்கு உங்கள் கையால் இந்த இறையை போட்டுவிட்டு, அந்த பறவைகள் அந்த இறையை சாப்பிடக்கூடிய அழகை கண் குளிர பாருங்கள். உங்கள் மனதுல் லேசாகும். வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று ஒரு தெம்பு கிடைக்கும். தன்னம்பிக்கையை இழந்தவர்களுக்கு தைரியம் பிறக்கும். வேலையில் முன்னேற்றமே இல்லை, வேலை செய்வதில் ஆர்வம் இல்லை. அக்கறை இல்லை. சிந்தனைகள் எல்லாம் செயலிழந்து கிடைக்கிறது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் நல்ல மாற்றம் தெரியும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால், வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்யக்கூடிய தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுடைய திறமை படிப்படியாக உயர தொடங்கும். கேட்பதற்கு இந்த பரிகாரம் மிக மிக எளிமையான பரிகாரம் போல தோணலாம். ஆனால் தொடர்ந்து 48 நாள் விடாமல் இதை செய்தால் உங்கள் வாழ்க்கையில், நீங்கள் நம்பவே முடியாத நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து, ஒற்றுமை அதிகரிக்க வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு போங்க.

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது உங்களுடைய குழந்தைகளையும் கூட அழைத்துச் சென்று இந்த பழக்கத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -