தீராத கடன் தீர செய்ய வேண்டிய தானம்

dhanam
- Advertisement -

நமக்கு எவ்வளவு தான் வருமானம் இரட்டிப்பானாலும், ஒரு சில கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வருமானமாக வரக்கூடிய பணம், வேறு ஏதேதோ வீண் விரயத்திற்காக செலவாகுமே தவிர, அந்த பணத்தை சேமித்து, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

இப்படி வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டுமே கட்டி பல வருடங்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் சீக்கிரமே அசல் தொகையை தர வேண்டும் என்று வேண்டி, இந்த பரிகாரத்தை செய்தால் ஒரு சில நாட்களில் நீண்ட நாள் கடனைக் கூட அடைக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினை தீர செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த தானங்கள் என்னென்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய தானம்

இந்த முதல் பரிகாரத்தை நீங்கள் எந்த நேரத்தில் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம். கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உங்களுடைய கையால் இந்த பொருட்களை வாங்கி தானம் செய்யுங்கள். கருப்பு எள்ளு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை தானமாக கொடுக்க வேண்டும். ரொம்ப கஷ்டப்படும் ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இந்த தானத்தை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் வீதியில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களுக்கு தேநீர் வாங்கி கொடுப்பது, சிற்றுண்டி வாங்கிக் கொடுப்பது போன்ற உதவிகளை செய்யலாம். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு உளுந்த வடை வாங்கி உங்கள் கையால் தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

சிம்பிளா சொல்லப்போனால் ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளியை உங்கள் கண்களில் பார்த்தால் ஒரு டீயும், இரண்டு வடையும் வாங்கி கொடுங்கள் போதும். சாஸ்திர ரீதியாகவும் இந்த பரிகாரம் உங்கள் கடனை தீர்க்கும். கஷ்டப்பட்டு வேலை செய்பவர்களுடைய பசியை ஆற்றிய அந்த புண்ணியமும் உங்களை வந்து சேரும். அதனால் நீங்கள் சீக்கிரம் பண பிரச்சனையில் இருந்து வெளிவரவும் வாய்ப்புகள் உள்ளது.

அடுத்ததாக இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கும் இந்த பரிகாரத்தை நீங்கள் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு கருப்பு நிறத்தில் இருக்கும் இரும்பு பாத்திரம் வாங்கிக் கொள்ளுங்கள். கடாய், கிணணம் எதுவாக இருந்தாலும் சரிதான். அதில் நிரம்ப நல்லெண்ணெயை ஊற்றி அந்த எண்ணெயில் உங்களுடைய முகத்தை பாருங்கள்.

- Advertisement -

பிறகு அந்த எண்ணெயையும் கடாயையும் அப்படியே எடுத்து ஏழை குடும்பத்திற்கு தானமாக கொடுத்து விடுங்கள். இந்த பாத்திரத்தையும் எண்ணெயும் நீங்கள் பயன்படுத்தவே கூடாது. இப்படி செய்தால் நம்முடைய கஷ்டம் அடுத்தவர்களுக்கு சென்று விடுமோ என்று நினைக்க வேண்டாம். அப்படியெல்லாம் நடக்காது.

இதையும் படிக்கலாமே: 9 வாரத்தில் சுப காரிய தடை விலக அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

இதை தானமாக பெறுபவர்களுடைய குடும்பமும் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். அதை பற்றிய கவலை உங்களுக்கு தேவை இல்லை. மேல் சொன்ன இந்த இரண்டு பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து வரும் பட்சத்தில் நீங்கள் எளிமையாக கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்.

- Advertisement -