9 வாரத்தில் சுப காரிய தடை விலக அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

hanuman
- Advertisement -

சுபகாரிய தடை விலக வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய வீட்டில் ஒரு கல்யாண பேச்சை பேச தொடங்குகிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் குழந்தைகள் ஜாதகத்தை கூட கொண்டு போய் ஜோதிடரிடம் காட்ட முடியாத அளவுக்கு ஏதோ ஒரு அசுப தடை வந்து கொண்டே இருக்கிறது எனும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வீட்டில் படித்து முடித்துவிட்டு உங்களுடைய குழந்தைகள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள், நல்ல வேலை அமையவே மாட்டேங்குது என்னும்போது இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். புது வீடு வாங்கணும்னு நினைக்கிறீங்க, புது நிலம் வாங்கணும், புது நகை வாங்க வேண்டும், இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

- Advertisement -

ஆனா அதற்கான வாய்ப்புகள் எல்லாம் சரியாகவே அமையவில்லை என்றாலும் பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்யலாம். சீக்கிரம் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களால் நடத்தி முடிக்க முடியாத காரியத்தை நடத்தி காட்ட செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக.

சுப காரிய தடை விலக அனுமன் வழிபாடு

இந்த பரிகாரத்தை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். வீட்டில் ஒரு ஹனுமனின் திருவுருவப்படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு விளக்கு ஏற்ற புதுசாக ஒரு மண் அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த ஒரு விளக்கிலேயே 9 வாரங்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

அனுமனின் திருவுருவப்படத்திற்கு முன்பு இந்த விளக்கை வைத்துவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு நிறத்தில் போட வேண்டும். விளக்கில் இருக்கும் நல்லெண்ணெயில் ஒரே ஒரு மிளகு போட்டுக் கொள்ளுங்கள். (விளக்கில் போடும் திரி மிளகை மட்டும் வாரம் வாரம் மாற்ற வேண்டும்). இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அனுமனுக்கு வேகவைத்த உருளைக்கிழங்கை நிவேதியமாக வைக்க வேண்டும்.

இதே போல 9 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டால் காரிய தடை விலகும். உங்களால் முடியாத காரியத்தை கூட முடித்துக் காட்ட உண்டான வழியை அந்த ஹனுமன் காட்டிக் கொடுப்பார். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு நெய்வேத்தியம் வைத்துவிட்டு, சிறிது நேரம் அனுமனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அனுமனிடம் சொல்லி அதற்கான வழியை காட்டும்படி உண்மையான நம்பிக்கையோடு வேண்டுதல் வையுங்கள். 9 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாடு முடிவதற்குள் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு அவித்த உருளைக்கிழங்கை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

முடிந்தால் இந்த ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை முடித்துவிட்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்து விட்டு, அந்த பிரசாதத்தை கொண்டு போய் இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத கடனும் காணாமல் போக கடலில் இதை கரைத்து விட்டால் போதும். தீரா கடன் தீர எளிய பரிகாரம்

ஒருவேளை உங்களுடைய வீட்டில் ஹனுமனின் திருவுருவ படம் வைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் பூஜை அறையிலேயே இந்த வழிபாட்டை செய்யலாம். விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு தீப சுடரை அனுமனாக நினைத்து வழிபாடு செய்யுங்கள். ஹனுமன் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழியை காட்டிக் கொடுப்பார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -