நாளை 21/6/2022 தேய்பிறை அஷ்டமி! பைரவருக்கு பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? காலத்தால் மாற்ற முடியாத உங்கள் பிரச்சனைகளும் தீருமா?

vilakku-bairavar
- Advertisement -

நாளை சுபகிருது வருடம் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நன்னாளாகும். இந்நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவதால் இந்நாளில் பஞ்ச தீப எண்ணெய் ஏற்றி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்கிற ஐதீகம் உண்டு. பகைவர்கள் ஒழிய, காலத்தினால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய அதீத சக்தி கொண்டுள்ள இந்நாளில் பைரவருக்கு எப்படி பஞ்ச தீப எண்ணெய் ஏற்றலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

காலச்சக்கரத்தை தன் கண் அசைவினால் இயக்கிக் கொண்டிருக்கும் கால பைரவருக்கு உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். அஷ்டமி, நவமியில் பொதுவாக சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். ஆனால் தேய்பிறை அஷ்டமியில் நீங்கள் பைரவரை வழிபடுவதால் தடைபட்ட சுபகாரியங்கள் தடையில்லாமல் முடிவுக்கு வரும். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த இந்த தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமையில் வருகிறது. நாளை பைரவர் கோவிலுக்கு சென்று பஞ்ச தீபத்தில் எண்ணெய் ஊற்றி இப்படி வழிபட்டு வந்தால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்கிறது ஆன்மீகம். எந்த ஒரு சிவ கோவிலிலும் முதல் பூஜை பிள்ளையாருக்கும், கடைசி பூஜை பைரவருக்கும் செய்யப்படுகிறது வழக்கம்.

- Advertisement -

ஆலய காவல் தெய்வமாக கருதப்படும் இந்த பைரவருக்கு அறுபத்தி நான்கு ரூபங்கள் இருந்தாலும் அஷ்ட பைரவர்கள் முதன்மையானவர்களாக கருதப்படுகிறார்கள். பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியில் கோவிலுக்கு சென்று அங்குள்ள பைரவர் சன்னதியில் செவ்வரளி மலர்கள் சாற்றி, பைரவரை தரிசிக்க வேண்டும். சிகப்பு நிற மலர்கள் என்றால் பைரவருக்கு மிகவும் பிடிக்கும் எனவே சிகப்பு நிறத்தில் நீங்கள் பூக்களை வாங்கி கொண்டு பைரவருக்கு சமர்ப்பிக்கலாம். ரோஜா பூ மாலை வாங்கி சாற்றி பைரவரை வழிபட்டால் விபத்துக்கள் அண்டாது.

கோவிலை காக்கும் காலபைரவர் நம் வீட்டையும் காத்துக் கொண்டிருக்கிறார். எனவே பைரவர் கோவிலில் கொடுக்கப்படும் விபூதியை கொண்டு வந்து எப்பொழுதும் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருக துவங்கும். பைரவர் சன்னிதியில் 5 அகல் தீபங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு அகலிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணை ஆகிய ஐந்து எண்ணெய்களை தனித்தனியாக ஊற்றி அதில் திரி போட வேண்டும். பைரவரை நோக்கி தீபம் எரியுமாறு விளக்குகளை வைத்து ஐந்து தீபங்களையும் உங்களுடைய கைகளால் ஏற்றுங்கள்.

- Advertisement -

பஞ்ச தீப எண்ணெயில் நீங்கள் விளக்குகளை ஏற்றும் பொழுது ஒரு விளக்கிலிருந்து, இன்னொரு விளக்கை ஏற்றக் கூடாது. ஒரு விளக்கில் இருக்கும் எண்ணெய் ஒரு விதமான பலனையும், இன்னொரு விளக்கில் இருக்கும் எண்ணெய் வேறு ஒரு பலனையும் கொடுக்க வல்லது. எனவே ஒன்றுடன் ஒன்று கலந்து தீபம் ஏற்றினால் பாவம் வந்து சேரும். எனவே ஐந்து தீபங்களின் சக்தியும் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் தனித்தனியாக நெருப்பைக் கொண்டு தீபம் ஏற்றுங்கள்.

பின்னர் பைரவர் அஷ்டகம், பைரவர் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை வாசித்து பைரவருக்கு உகந்த நைவேத்யம் ஏதாவது ஒன்றை பிரசாதமாகப் படைத்து மனம் உருகி பைரவரை வேண்டிக் கொண்டால் சகல, செல்வங்களும் நமக்கு வந்து சேரும். மேலும் கடன் பிரச்சினைகள் தீரும். தீர்க்க முடியாத பகை ஒழியும். விதி என்று நினைத்த காரியம், காலத்தால் மாற்ற முடியாத பிரச்சினைகளையும் மாற்றும் அற்புதம் நடக்கும். நீங்களும் இந்நாளை தவறவிடாமல் பைரவரை வழிபட்டு பயன் அடையுங்கள்.

- Advertisement -