திடீர் அதிர்ஷ்டம் பெற மகாலட்சுமி பரிகாரம்

mahalshmi12
- Advertisement -

நேற்று வரைக்கும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவன், ஏதோ ஒரு அதிர்ஷ்ட காற்று வீசியதால் இன்று லட்சாதிபதியாகிவிட்டான். இவன் யோகக்காரன் என்று, நம்மில் பல பேர் பலரை பார்த்து பேசி இருப்போம். குடிசை வீட்டில் இருந்தவன் கோபுரத்திற்கு சென்ற கதை ஒரு மணி நேரத்தில், ஏன் 1 நிமிடத்தில் கூட நடந்திருக்கும். நம்மால் நம்பவே முடியாது.

ஆமாங்க அதிர்ஷ்ட காற்று யாருக்கு எப்போ வீசும் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த மகாலட்சுமி நினைத்தால் போதும். யார் வீட்டில் வேண்டும் என்றாலும் செல்வ மழையை பொழிய செய்ய முடியும். உங்கள் வீட்டிலும் செல்வம் மழை பொழிய வேண்டுமா. மகாலட்சுமிக்கு மனதார உங்கள் கையால் இந்த மாலை கட்டிப்போட்டுக் கொண்டே வாருங்கள். ஒருநாள் திடீர் அதிர்ஷ்டம் அடித்து நீங்கள் திடீர் பணக்காரரா மாறிடுவீங்க. நம்ப முடியாது நிறைய நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும்.

- Advertisement -

திடீர் அதிர்ஷ்டம் தரும் மகாலட்சுமி மாலை

சரிங்க, அந்த மகாலட்சுமியை வசியம் செய்ய என்ன செய்யணும். ஒரு மாலை இருக்கு. இந்த மாலையை உங்கள் கையால் கட்டி மகாலட்சுமிக்கு போட்டால், திடீர் அதிஷ்டம் உண்டாக கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த மாலை என்ன அதை எப்படி கட்டி மகாலட்சுமிக்கு போடுவது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த மாலைக்கு நமக்கு தேவையான பொருள். விரலி மஞ்சள், ஏலக்காய், மஞ்சள் நிற கயிறு. ஒரு மஞ்சள் நிற கயிறை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் விரலி மஞ்சள் 5, அதன் பிறகு ஏலக்காய் 5, மீண்டும் விரலி மஞ்சள் 5, ஏலக்காய் 5 என்று மாற்றி மாற்றி கட்ட வேண்டும். ஏலக்காயை கட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.

- Advertisement -

கொஞ்சம் பெரிய ஏலக்காயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மஞ்சளை நூலில் கட்டிவிட்டு அந்த நூலில் ஊசி வைத்து ஐந்து ஏலக்காயை கோர்த்தும் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். மஞ்சள் ஏலக்காய் கலந்த மாலையை கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு மகாலட்சுமியின் சுவாமி படத்திற்கு மாட்டும் அளவுக்கு கட்டினாலே போதும்.

வெள்ளிக்கிழமை தோறும் இந்த மாலையை உங்கள் கையால் கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமிக்கு மாலையாக போடுங்கள். ரொம்பவும் தொங்க தொங்க இந்த மாளிகை கட்ட வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. மகாலட்சுமி போட்டோவுக்கு இரண்டு முனை இருக்கும் அல்லவா. அந்த இரண்டு முனையில் இருக்கும் ஆணியில் இந்த மாலையை மாட்டி விட்டால் கூட போதும். U வடிவத்தில் சின்னதாக அந்த மாலை இருக்கட்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை எப்படி இந்த இரண்டு பொருளை கட்டி மகாலட்சுமிக்கு மாலையாக போட்டு, பசும்பாலில் பாயாசம் செய்து வைத்து பணவரவு அதிகரிக்க பிரார்த்தனை வைத்தால், உங்கள் வருமானம் பல மடங்கு பெருக தொடங்கிவிடும். ஒரே ஒரு வாரம் வெள்ளிக்கிழமை, இந்த பரிகாரத்தை செய்தால் போதுமா.

போதாது, ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். குறைந்தது 11 வெள்ளிக்கிழமைகளில் இருந்து, 48 வெள்ளிக்கிழமை வரை இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வ மழை பொழியும். ஒவ்வொரு வாரம் முடியும் போதும் பழைய மாலையை எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கோவிலுக்கு போனால் அங்கே மரம் இருக்கும் அல்லவா அந்த மரத்தில் இந்த பழைய மாலையை மாட்டி விட்டு வரலாம்.

இதையும் படிக்கலாமே: வருமானம் அதிகரிக்க பரிகாரம்

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மறக்காமல் மகாலட்சுமிக்கு இந்த மாளிகை கட்டிப்போட்டு வருமானம் பெறுக வழியைக் காட்டத் தாயே என்று கேட்டால் உங்களுக்கு நிச்சயம் பண கஷ்டம் வராது. எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லதுக்கு மேல் நல்லது மட்டும்தான் நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -