இன்றே குங்குமப்பூவை இதனுடன் சேர்த்து பீரேவில் வைத்து விடுங்கள். நீங்கள் நினைத்த பணம் உடனே கைக்கு வந்து சேரும். திடீர் பண வரவை தரும் எளிய பரிகாரம்.

cash kumkumapoo
- Advertisement -

பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை யாரும் யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கூட பணம் என்றால் என்ன என்று புரிகிறது. இன்று பணம் இல்லாமல் ஒன்றுமே இல்லை என்று நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆகையால் தான் எல்லோரும் இந்த பணத்தின் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தை நோக்கி ஓடுபவர்களுக்கெல்லாம் பணம் கைக்கு வந்து விடுவது கிடையாது. பணம் கைகளில் வந்து சேர்வதற்கு கூட யோகம் இருந்தால் தான் நடக்கும்.

இந்த பணத்தின் தேவை மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. திடீரென பண தேவை ஏற்பட்டு அதை சமாளிக்க முடியாத சூழ்நிலையும் எல்லோர் வாழ்விலும் நடக்கும். அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஆன்மீகம் சில தாந்திரீக பரிகாரங்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் திடீர் பண வரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

திடீர் பணவரவு ஏற்பட பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவை. இந்த மூன்றையுமே நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அதாவது மஞ்சள் நிற காட்டன் துணி, சோழி ஐந்து, இந்த சோழி வெள்ளை நிறத்தில் மேலே மஞ்சளும் பச்சையும் கலந்தது போன்று இருக்கும். அந்த சோழியை மட்டும் தான் வாங்க வேண்டும். அதன் பிறகு குங்குமப்பூ இதில் இந்த குங்குமப்பூவின் விலை சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த பரிகாரத்திற்கு குங்குமப்பூ மிகவும் முக்கியம் எனவே கொஞ்சம் சிரமப்பட்டு குங்குமப்பூவையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது கடைகளில் வாங்கிய இந்த பொருளை எல்லாம் வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு மகாலட்சுமி தாயார் படத்துக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வணங்கிய பிறகு நீங்கள் வாங்கி வந்திருக்கும் மஞ்சள் துணியில் இந்த ஐந்து சோழி வைத்து இத்துடன் 5 குங்குமப்பூ இதழ்கள் மட்டும் வைத்து ஒரு சிறிய மூட்டையாக கட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது தாயாரின் படத்திற்கு முன்பாக இந்த குங்குமப்பூ முட்டையை வைத்து உங்களின் தேவை எதுவோ அதற்கான பணம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அதற்கு வழி செய்யுமாறு மனதார வேண்டிக் கொண்டு இந்த மூட்டை எடுத்து சென்று உங்கள் பீரோவில் பணம் வைத்து இடத்தில் வைத்து விடுங்கள். அல்லது பீரோவில் எங்கேனும் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிச்சயம் கிடைப்பதற்கான வாய்ப்பு அமைய இந்த குங்குமப்பூ முட்டை பரிகாரம் உதவி புரியும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு எப்போது பண தேவை ஏற்படுகிறது அப்போது உடனே செய்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த மூட்டை பீரோவிலே இருக்கட்டும். மறுபடியும் இது போல அவசர தேவை வரும் போது புதிதாக செய்து வைத்துக் கொள்ளுங்கள். சோழியை மட்டும் நாம் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஒன்பது வாரம் இந்த தானத்தை செய்தால் அரசாங்க வேலை கிடைப்பது நிச்சயம். நிரந்தர வருமானத்தை தர போகும் சுலபமான பரிகாரம்.

ஒரு வேளை உங்களுக்கு எப்போதும் இந்த மூட்டை இருக்க வேண்டும் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் வியாழன், வெள்ளி இந்த இரண்டு நாட்களை தேர்வு செய்து அந்த நாளில் எந்த பரிகாரத்தை செய்யும் பொழுது இன்னும் அதிக பலனை கொடுக்கும். திடீர் பணவரவு ஏற்படுத்தும் இந்த குங்குமப்பூ சோழி மூட்டை பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -