தீயாய் கொழுந்து விட்டு எரியும் கணவன் மனைவி பிரச்சனை தீர இந்த கோவிலுக்கு போங்க

thiru-sakthi-mutram
- Advertisement -

சாதாரணமாக கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது வேறு. இன்று சண்டை போட்டுக் கொண்டால் நாளை ஒற்றுமையாக வாழ தொடங்கி விடுவார்கள். ஆனால் சில குடும்பங்களில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் கொழுந்துவிட்டு தீயாய் எரியும். வந்த பிரச்சனை இருவரையும் நிரந்தரமாக பிரித்து வைக்கும் அளவுக்கு பூதகரமாக வெடிக்கும்.

அந்த பிரச்சனையை யார் பஞ்சாயத்து செய்து வைத்தாலும் தீர்த்து வைக்க முடியாது. ஒரு கட்டத்தில் கோர்ட்டு கேஸ் வரைக்கும் இவர்கள் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை உங்கள் குடும்பத்திற்கோ அல்லது உங்களது தெரிந்தவர்கள் குடும்பத்திற்கோ இருந்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்பு படியுங்கள்.

- Advertisement -

ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் அன்னியூன்யம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அது என்ன கோவில் எங்கு இருக்கிறது அந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபாடு செய்வது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கணவன் மனைவி பிரச்சினையை தீர்க்க செல்ல வேண்டிய கோவில்

கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் திருசக்திமுற்றம் சிவன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் பார்வதி தேவி சிவபெருமானை வழிபாடு செய்து, தழுவி முத்தமிட்டபடி காட்சி தருகின்றார். இதனால்தான் இந்த கோவிலுக்கு சிவசக்திமுத்தம் என்ற பெயர் வந்தது. சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து கட்டி அணைத்தபடி இத்திருத்தலத்தில் காட்சி அளிப்பதால், இங்கு வரும் தம்பதியருக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் சீக்கிரம் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அதேபோல திருமண தடை உள்ளவர்களும் இத்திருத்தலத்தில் வந்து இந்த ஈசனையும் சக்தி தேவையும் வழிபாடு செய்துவிட்டு சென்றால் அவர்களுக்கு திருமண தடை விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இத்திருத்தளத்தில் திங்கட்கிழமை தோறும் திருமண தடை விலக, கணவன் மனைவி பிரச்சனைக்கு தீர்வு பெற ஒரு பிரத்தியேக பூஜை நடைபெறும்.

அந்த பூஜையில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். உங்களுடைய பிரச்சனையை குருக்களிடம் சொன்னால் அந்த பிரச்சனைக்கு தீர்வு தர முறையான வழிபாட்டு முறையை அவர் உங்களுக்கு சொல்லிக் கொடுத்து விடுவார். அதை நீங்கள் பின்பற்றி வந்தாலே போதும் உங்கள் கணவன் மனைவி பிரச்சினைக்கு உண்டான தீர்வினை சுலபமாக சீக்கிரமாக பெற்று விட முடியும்.

- Advertisement -

சில பேருக்கு திருமணம் நடப்பதிலேயே பிரச்சனை இருக்கும். காதலில் சிக்கல் இருக்கும். மனதில் நினைத்தவரை கறம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த கோவிலுக்கு செல்வது. அதற்கும் ஆன்மீகத்தில் வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. அந்த சிவபெருமானை தானே அர்த்தனாரீஸ்வரர் கோலத்தில் நாம் பார்த்திருக்கின்றோம். கிருஷ்ணருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோலம் உள்ளது.

நாமக்கல் அருகில் மோகனூர் என்னும் ஊரில் சம்மோஹன கிருஷ்ணர், அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் காட்சி தருகின்றார். கிருஷ்ணர் பாதி, ராதை பாதி சேர்ந்த உருவம். மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலில், இந்த சம்மோஹன கிருஷ்ணர் சனசன்னிதானம் அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

காதலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று இந்த சம்மோஹன கிருஷ்ணரை ஒருமுறை வழிபாடு செய்து விட்டு வரவும். இந்த வழிபாடு உங்களுடைய காதலை கல்யாணம் வரை கொண்டு செல்லும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த மேல் சொன்ன இரண்டு வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -