திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டிய ராசிக்காரர்கள்

thrichendur murugan vazhipadu
- Advertisement -

இறைவழிபாட்டிற்கும் நம்முடைய ராசி நட்சத்திரத்தின் நெருங்கிய தொடர்பு உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன கோவிலுக்கு செல்ல வேண்டும் அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் கணித்து தந்திருக்கிறது. அந்த வகையில் திருச்செந்தூர் முருகர் கோவிலில் எந்தெந்த ராசிக்காரர்கள் சென்றால் யோகம் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமானின் வழிபாட்டு ஸ்தலங்கள் பல இருந்தாலும் அதில் இந்த திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபடும் போது வாழ்க்கையில் எல்லா விதமான ஏற்றங்களையும் பெற முடியும். ஏனெனில் எந்த ஸ்தலத்தில் தான் முருகப் பெருமானே குருவாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். நவகிரகங்களில் குரு பகவான் மட்டுமே முழு சுப கிரகமாக இருக்கிறார்.

- Advertisement -

முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்க தேவர்களின் குருவான குரு பகவான் ஆலோசனைகளை வழங்கினார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இங்கு தனக்கு நிகரான அனைத்து மரியாதைகளும் குரு பகவானுக்கும் உண்டு என்று அருள் புரிந்தார். இவ்வாறு அருள் புரிந்ததோடு மட்டுமின்றி அங்கு அவர் குருபகவானாகவே அமர்ந்து அனைவருக்கும் அருளாசியும் புரிந்து வருகிறார். இதுவே இந்த ஸ்தலத்தினுடைய முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

குரு பார்க்கின் கோடி நன்மை என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் முருகப்பெருமானே குருவாக இருக்கக் கூடிய இந்த ஸ்தலத்தில் பெருமைகளை பற்றி கூற இதை விட பெரிய வார்த்தை ஒன்றும் இருக்க முடியாது. ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்றத்தை சந்திக்க வேண்டும் எனில் அவருக்கு குருபகவானின் அருளாசி நிச்சயமாக தேவை. அத்தகைய அருளை வாரி வழங்கும் புண்ணிய ஸ்தலமாக இந்த திருச்செந்தூர் விளங்குகிறது.

- Advertisement -

இந்த ஸ்தலத்தில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சென்று அவரை வழிபடும் பொழுது அவருடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டும் இன்றி அவர்கள் பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து கோடீஸ்வர யோகத்தை பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

திருச்செந்தூர் செல்ல வேண்டிய ராசிக்காரர்கள்

அது மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம், இந்த ஆறு ராசிக்காரர்களும் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை முழுமையாக வழிபட்டு வந்தால் அவர்களுடைய வாழ்க்கை அவர்களே நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாறி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த ராசிக்காரர்கள் இவர்களுடைய ஜென்மம் நட்சத்திர நாளன்று இந்த கோவிலுக்கு செல்லும் போது அதனுடைய பலன் அபரீதமாக இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இதில் மேலும் இரண்டு ராசிகள் இன்னும் சிறப்பு பலன்களை பெறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அது தனுசு மற்றும் மீன ராசி. ஏனெனில் இவர்களுடைய ஆதிக்கமான தெய்வமே குரு பகவான் தான். குருவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த ராசிக்காரர்கள் குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்றால் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் நல்ல நிலையை அடையும்.

இதையும் படிக்கலாமே: மனைவியை அனுசரித்து செல்லும் ராசிகள்.

அப்படியானால் இங்கு மற்ற ராசிக்காரர்கள் சொல்லக் கூடாதா என்ற கேள்வி எல்லாம். 12 ராசிக்காரர்களுக்கும் பொருந்தக் கூடிய ஆலயம் தான் இந்த திருச்செந்தூர் முருகன் கோவில். அதில் இவர்கள் செல்லும் பொழுது அதிகப்படியான பலனை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் ஆலயத்தை பற்றிய இந்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் அங்கு சென்று அதிக பலனை பெறலாம்.

- Advertisement -