அடைக்கவே முடியாத கடனையும் படிப்படியாக அடைக்க நிலை வாசல் படியில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை செய்தால் கோடி கடனும் கரைந்தே போகுமே!

vasal1
- Advertisement -

கடன் இல்லாத மனிதனை தான் உலகில் மிகப்பெரிய பணக்காரன் என்று நாம் கூறுவது உண்டு. ஆனால் இங்கு இருக்கும் யாருக்குத் தான் கடன் இல்லை? கடன் இல்லாத தனி நபர்கள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடன் என்பது சர்வசாதாரணமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் விளையாடிக் கொண்டிருக்கும். அந்த வகையில் சிலர்களுடைய கடன் அடைக்கவே முடியாமல் ஏதாவது ஒரு தடைகளை சந்திக்க வேண்டி வரும். இப்படிப்பட்டவர்கள் படிப்படியாக உங்களுடைய கடனை அடக்க நிலை வாசல் படியில் பழங்கால முறைப்படி இதை செய்து வாருங்கள். தீர்க்க முடியாத கடனையும் எளிதாக தீர்க்கக் கூடிய இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் செய்து பயனடைய தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

பணம் சேரவும், இருக்கின்ற கடன்கள் யாவும் அடையவும் ஆன்மீகத்தில் மிகச் சிறந்த ஒரு பொருளாக இருப்பது மகாலட்சுமிக்கு உரிய ‘கல் உப்பு’ ஆகும். இந்த கல் உப்பு நிறைந்திருக்கும் இல்லங்களில் தீராக் கடன்கள் கூட கரையும் என்பது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் கல் உப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் குறைவு. அதை நிரம்ப நிரம்ப வைத்திருக்க வேண்டும் என்கிற குறிப்புகளை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான்.

- Advertisement -

உப்பு வாங்குபவர்கள் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் வாங்கி பீங்கான் ஜாடியில் நிரப்பி வையுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எப்பொழுது உப்பு தீர போகிறதோ, அப்பொழுது வெள்ளிக்கிழமையில் வாங்கினால் போதுமானது. உப்பு அதிகம் உடலில் சேர்ந்தால் ஆயுள் குறையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம் தூள் உப்புக்கு பதிலாக கல் உப்பு பயன்படுத்தினால் நல்லது.

இத்தகைய உப்பை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் துணியில் இதை போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு சிறு துண்டு வசம்பு சேர்க்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரில் மடித்து இவற்றுடன் வையுங்கள். இந்த மூன்று பொருட்களையும் மஞ்சள் துணியில் வைத்து ஒரு முடிச்சாக முடிந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த முடிப்பை கொண்டு போய் நிலை வாசல் படியில் மேலே தலையில் தட்டாதவாறு கட்டி விட வேண்டும்.

- Advertisement -

இந்த ஒரு பரிகாரத்தை அமாவாசையில் தான் செய்ய வேண்டும். மற்ற நாட்களில் செய்தால் பலன் தராது. அமாவாசை அன்று இதை கட்டும் பொழுது வியாழன் கிழமையாக இருந்தால் ரொம்பவே சிறப்பான ஒரு பலன் கிடைக்கும். எனவே முதன் முதலில் வரக்கூடிய வியாழன் கிழமையுடன் கூடிய அமாவாசையில் செய்ய துவங்கி அடுத்தடுத்த அமாவாசைகளில் தொடர்ந்து இதை மாற்றிவிட வேண்டும். மாற்றும் பொழுது உப்பை தவிர மற்ற பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:
என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வீட்டு வாசல்ல பிள்ளையார் இருக்கா அப்போ இதை செய்ய மறக்காதீங்க!

உப்பை மட்டும் ஒரு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி அதில் கொட்டி கரைத்து விடுங்கள். கரைத்த தண்ணீரை யாருடைய கால்களிலும் படாதவாறு வெளியில் கொட்டி விடுங்கள். அவ்வளவுதான், தொடர்ந்து ஒவ்வொரு அமாவாசையிலும் இதை புதிதாக மாற்றி நிலை வாசல் படியில் தொங்க விட்டுக் கொண்டே வந்தால் இருக்கின்ற கடன்கள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக உப்பு கரைவது போல கரைய ஆரம்பிக்கும். குறிப்பு: மஞ்சள் துணியை ஒவ்வொரு முறை மஞ்சளில் நனைத்து மீண்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் செய்யக்கூடிய இந்த பூஜைகள், பரிகாரங்கள் யாவும் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றக் கூடியவைகள். தோஷங்களை ஒழித்து, கடன் இல்லாத வாழ்வை கொடுக்க கூடியவை. எனவே நம்பிக்கையோடு செய்தால் தான் முழு பலன் கிடைக்கும்.

- Advertisement -