குழந்தை பேறு கிடைக்க, சுக பிரசவம் உண்டாக இதை துதியுங்கள்

thirukarukavur-amman-compressed
- Advertisement -

ஒரு மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்பதற்கு ஒரு சிறந்த அடையாளமாக இருப்பது அவனுக்கு ஏற்படுகின்ற குழந்தை செல்வம் தான். அதிலும் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் தங்களை முழுமையான பெண்ணாக உணரச் செய்வது அவர்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தினால் தான். திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் வாரிசு இல்லாமல் போவது, அடிக்கடி கருகலைவது, குறை பிரசவம் போன்றவற்றை பல பெண்கள் சந்திக்கின்றனர். அவற்றிற்கெல்லாம் தீர்வாக இருக்கும் “திருக்கருகாவூர் ஸ்லோகம்” இதோ.

Mariamman

திருக்கருகாவூர் ஸ்லோகம்

ஹமவத் யுத்தரரே பார்ச்வே
ஸுரதா நாம யக்ஷிணி

- Advertisement -

தஸ்ய ஸ்மரண மாத்ரேண
விசல்யா கர்பிணிய பேது

MathuraKaliamman

குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் இருவரும் கர்பரக்ஷம்பிகை அம்மனை மனதில் நினைத்தவாறு துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் தம்பதிகள் இருவருமோ அல்லது பெண்கள் மட்டுமோ அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர். பிரசவ காலத்தில் பெண்களுக்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏதும் ஏற்படாமல் காக்கும். கரு கலைவது, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படாமல் தடுத்து சுக பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும்.

- Advertisement -

Amman silai

எந்த ஒரு உயிரும் தாயில்லாமல் பிறப்பதில்லை. இறைமையும், தாய்மையும் ஒன்று தான் என்பது நமது சாத்திரங்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் உறுதியான கருத்தாகும். எல்லா உயிர்களுக்கும் தாய் இருந்தாலும் அகிலம் அனைத்திற்கும் தாயாக இருப்பவர் அன்னை பராசக்தி. பிரபஞ்சம் முழுவதும் தனது சக்தியை நிரம்பச் செய்திருக்கும் அன்னையை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் அருள்வார். பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையை காக்கும் ஸ்ரீகருக்காத்தம்மனின் மந்திரத்தை துதித்து வந்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
துளசி ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thirukarukavur slokam in Tamil. It is also called as Garbarakshambigai mantra in Tamil or Garbarakshambigai slokam in Tamil or Karukathamman manthiram in Tamil or Thirukarukavur manthiram in Tamil.

- Advertisement -