திருமண தடையை உடைக்கும் குலதெய்வ பரிகாரம்

kuladheivam
- Advertisement -

சித்தர்கள் வாக்கு பொய்க்காது. குருமார்கள் சொன்ன வாக்கு பொய்க்காது. அவர்கள் சொன்னதை நாம் நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில், பலன் கை மேல் கிடைப்பது உறுதி. அப்படி குருமார்களால் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வது பெருசு கிடையாது. மீண்டும் பதிவு செய்து கொள்கிறோம்.

நம்பிக்கையோடு முழு மனதோடு இதைப் பின்பற்றினால், 90 நாட்களில் உங்கள் வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்கும். உங்கள் ஜாதகத்தில் எந்த தோஷம், எந்த கிரகம் சரியில்லாமல், திருமணத்தை நடத்த விடாமல் தடையாக நின்று இருந்தாலும், அந்த தடை உடையும். இது உறுதி. சரி அந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் என்ன. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

திருமண தடையை உடைக்கும் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு முதலில் நீங்கள் ஒரு பித்தளை சொம்பு எடுத்துக்கோங்க. அதில் ஒரு மஞ்சள் துணியை கட்டி நடுவில் சின்ன ஓட்டை போட்டுடுங்க. இது ஒரு உண்டியல். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு விளக்கு ஏற்றி இந்த உண்டியலில் ஒரு ரூபாய் நாணயத்தை போடுங்க. திருமணம் நடக்க வேண்டும் என்று மனம் உருகி அந்த குலதெய்வத்தை வேண்டிக்கோங்க.

வேண்டுதல் போது சந்தேகம் இருக்கக் கூடாது நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நம்பனும். அவ்வளவுதான். தினசரி உங்க வேலையை தொடங்கி விடலாம். நீங்கள் ஆண்களாக இருக்கலாம். பெண்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

இந்த வேண்டுதலை செய்துவிட்டு வெளியில் போறீங்க. யாரோ ஒருவர் பசியாக இருப்பவர்கள் ஒருவருக்கு உங்களால் முடிந்த சாப்பாடு வாங்கி கொடுங்கள். இரண்டு இட்லி போதும். ஒரு டீ ஒரு பன் போதும். உங்கள் கையில் இருபது ரூபாய் இருந்தால் கூட அந்த காசுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்யனுமே அப்படி என்பதற்காக செய்யக்கூடாது. மன நிறைவோடு இந்த இரண்டு பரிகாரத்தை நீங்கள் செய்து வந்தால் உங்களுக்கு 90 நாட்கள் வரை கூட காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பாகவே கூட வரன் தேடி வரும். திருமண பாக்கியம் கை கூடும்.

- Advertisement -

ஆனால் இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய மனதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும். அதே சமயம் இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் நிச்சயம் நமக்கு நல்ல காலம் கைக்கூடி வரும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். 90 நாட்கள் கழித்து உண்டியலில் போட்ட பணத்தை குலதெய்வ கோவிலுக்கு போய் செலுத்தி விட்டு வர வேண்டும்.

நீங்கள் பெண்களாக இருந்தால் இன்னொரு விஷயத்தையும் செய்யுங்கள். செவ்வாய் கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யணும். சின்ன மண் அகல் விளக்கில் கொஞ்சம் நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ விட்டு திரி போட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு எனக்கு நல்ல இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் அதை நீதான் அமைத்து தர வேண்டும் உன்னை போல பெண் தான் நானும்.

எனக்கு இந்த வரத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று உரிமையோடு கேட்டு பாருங்கள். துர்க்கை அம்பாள் உங்களுக்கு உடனடியாக ஒரு வாழ்க்கை துணையை நல்லபடியாக கையில் பிடித்துக் கொடுத்து விடுவாள். ஆனால் வேண்டுதல் வைக்கும் போது இக்காரணத்தைக் கொண்டும் அழக்கூடாது. இதை எல்லாம் நாம் சொல்லவில்லை.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை நீக்க உதவும் தும்பை பூ.

நமக்கு முன்னால் வாழ்ந்த குருமார்கள் சொல்லி வைத்துள்ளார்கள். சித்தர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆகவே, இந்த வாக்குப் பலிக்கும் என்ற நல்ல தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -