திருமணம் நடக்க வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாடு

durgai
- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் பணம் காசு இல்லை, நகை வாங்க முடியவில்லை அதனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு திருமணம் தாமதம் ஆகிறது என்ற சூழ்நிலை இருந்தது. இந்த காலத்தில் பெண்கள் நன்றாக படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பொன் பொருளை எல்லாம் வீட்டில் இருக்கும் பெற்றவர்கள் கடன் வாங்கியாவது ரெடி பண்றாங்க.

பெண்களே லட்ச கணக்கில் சம்பாதிக்கிறாங்க. ஆனாலும் மாப்பிள்ளை கிடைக்காமல் பெண்களுக்கு திருமணமாகாத சூழ்நிலை இருக்கிறது. உங்களுடைய வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைக்கு திருமண வயதை கடந்தும் சரியான வரன் அமையாமல் கஷ்டப்படுறீங்களா. இந்த பரிகாரம் உங்களுக்காக.

- Advertisement -

திருமணம் நடக்க துர்க்கை அம்மன் வழிபாடு

வியாழக்கிழமை மாலையே மருதாணி செடியிலிருந்து மருதாணி இலைகளை பறித்து வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள். அந்த மருதாணி இலைகளை நன்றாக கழுவி விடுங்கள். ஒரு அம்மியில் வைத்து மருதாணியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அம்மி இல்லை என்றால் மிக்ஸி ஜாரை பயன்படுத்தலாம். ஒரு சொம்பில் சுத்தமான நல்ல தண்ணீர் எடுத்துக்கோங்க.

அதில் இந்த அரைத்த மருதாணி விழுதை எடுத்து போட்டு கரைத்து விடுங்கள். இந்த தண்ணீரை வியாழக்கிழமை இரவே தயார் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். சீக்கிரம் நல்ல வரன் அமைய வேண்டும் என்று, திருமணமாகாத பெண்ணின் கையால் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. இல்லை என்றால் அந்த பெண்ணினுடைய தாய் இந்த பரிகாரத்தை செய்யலாம். தயார் செய்த இந்த சொம்பை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த தீர்த்தத்தை கொண்டு போய், உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கும் கோவிலில் கொடுங்கள். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் இந்த தீர்த்தத்தை கொடுத்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்யச் சொல்லுங்கள்.

அந்த அபிஷேகத்தை நீங்களும் பார்க்க வேண்டும். அபிஷேகம் நடந்து முடிந்த பிறகு அம்பாளுக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால் நிச்சயமாக உங்கள் பெண் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் யோகம் சீக்கிரம் வரும்.

- Advertisement -

இதே மருதாணியை அடுத்த ஒரு சில வாரங்களில் உங்களுடைய பெண் பிள்ளையின் கையில் கல்யாண மருதாணியாக வைப்பீங்க. அந்த அளவுக்கு ஆசீர்வாதத்தை அம்பாள் உங்கள் பிள்ளைக்கு கொடுத்து விடுவாள். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சரி, ஆண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது. திருமணமாகாத ஆண்கள் புதன்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவன் கோவிலில் சிவன் பார்வதி முன்பாக இரண்டு மண் விளக்குகளின் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி சீக்கிரம் நல்ல மணமகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால் உங்களுக்கு திருமணம் நடக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் குருபகவான் வழிபாடு

9 வாரங்கள் தொடர்ந்து புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒன்பது வாரத்தில் இடையே எந்த தடங்கலும் வராமல் இந்த பரிகாரத்தை செய்து விட்டால் உங்களுக்கும் நல்லது நடக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்கள் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -