விரைவில் திருமணம் நடக்க, 2 வில்வகாய்கள் இருந்தால் போதும். 48 நாட்களில் திருமணத் தடை நீங்கி கெட்டி மேல சத்தம் கேட்கும்.

marriage
- Advertisement -

திருமண வயதைக் கடந்தும் நிறைய ஆண்களுக்கு, பெண்களுக்கு திருமணம் நடக்காமல் இருக்கும். திருமணம் நடக்காத பிள்ளைகளை நினைத்து பெற்றோர்கள் மிகவும் வருத்தப் படுகிறார்கள். தோஷ நிவர்த்தி பரிகாரம், திருமணம் நடக்க பரிகாரம் என்று எவ்வளவோ விஷயங்களை செய்தாகிவிட்டது. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. கேட்டு மேல சத்தம் எங்கள் வீட்டில் கேட்கவில்லை என்பவர்கள் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை மட்டும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய மகனுக்கோ மகளுக்கோ நல்ல வரன் கூடிய சீக்கிரத்தில் தேடி வரும்.

வில்வமரம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சிவன் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை சிவன் ஆலயம் இருந்தால் அந்த கோவிலில் கட்டாயம் வில்வமரம் இருக்கும். திருமணமாகாத அந்த குறிப்பிட்ட நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணமாகாத அந்த நபருக்கு எத்தனை வயதோ, அதாவது உதாரணத்திற்கு 35 வயது ஆகிவிட்டது. இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

- Advertisement -

சிவன் கோவிலில் இருக்கும் இந்த வில்வ மரத்திற்கு முன்பாக 35 மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த வில்வ மரத்தை 35 முறை வலம் வந்து நல்லபடியாக இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்று சிவபெருமானை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு நாள் இந்த வழிபாட்டை செய்தால் போதும். அந்த மரத்திலிருந்து கீழே விழுந்த 2 வில்வகாய்களை எடுத்துக் கொள்ளுங்கள். மரத்திலிருந்து காய்களை பறிக்க கோவில் அனுமதி கொடுத்தால் 2 காய்களை பறித்து கொள்ளலாம்.

அந்த இரண்டு வில்வ காய்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து மஞ்சள் துணியில் வைத்து அதோடு ஒரு கைப்பிடி அளவு நவதானியத்தை வைத்து முடிச்சு போட்டு கட்டி பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் இந்த முடிசுக்கு இரண்டு மண் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக திருமணம் விரைவில் நடக்கும்.

- Advertisement -

கோவிலுக்குச் சென்று வில்வ மரத்தை வலம் வரக்கூடிய பரிகாரத்தை திருமணம் ஆகாத குறிப்பிட்ட அந்த ஆண் பெண் தான் செய்ய வேண்டும். வீட்டில் வில்வக்காய் வழிபாட்டை பெற்றவர்களும் செய்யலாம். தவறு கிடையாது. நாற்பத்தி எட்டு நாட்கள் முடிந்ததும், 2 வில்வ காய்களையும் சிவன் கோவில் மரத்தடியிலேயே கொண்டுபோய் வைத்துவிடுங்கள். நவதானியங்களையும் அந்த மரத்திற்கு ஓரமாக கொட்டி விடுங்கள். எறும்புகள் வந்து சாப்பிட்டுக் கொள்ளும்.

சூழ்நிலை காரணமாக உங்களுடைய கிரக தோஷங்களின் காரணமாக நாற்பத்தி எட்டு நாட்களில் திருமணம் நிச்சயிக்கப் படவில்லை என்றால் உடனே மனம் தளர்ந்து விடக்கூடாது. மீண்டும் சிவபெருமான் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வில்வ மரத்தை வலம் வந்து வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு கை மேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -