தினம் தினம் நன்மை நடக்க சொல்ல வேண்டிய பதிகம்

sivan4
- Advertisement -

நிறைய பேருக்கு இன்று நேரமின்மை காரணமாக இறைவழிபாடு செய்ய முடியவில்லை, கோவிலுக்கு போக முடியவில்லை, வீட்டில் விளக்கு ஏற்ற முடியவில்லை, சாமியை ஒரு நிமிடம் கூட நினைத்து வழிபாடு செய்ய முடியவில்லை. என்றாலும் பரவாயில்லை. உங்களுக்கு அந்த இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும். நீங்களும் இந்த மண்ணில் நல்லா வாழ்வீங்க.

அதற்கு உண்டான பதிகத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இது திருஞான சம்பந்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட, திருமுறையில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் வரிகள். இந்த வருடம் முழுவதும் தினமும் காலையில் எழுந்து இந்த பாடல் வரிகளை பாராயணம் செய்யலாம். அதற்கும் நேரம் இல்லை என்கிறீர்களா இந்த வருடத்தில் உங்கள் குடும்பத்தில் விசேஷ நாட்கள் வரும் அல்லவா.

- Advertisement -

வீட்டில் இருப்பவர்களுடைய பிறந்தநாள் திருமணநாள் காதுகுத்து போன்ற மற்ற நல்ல விசேஷங்கள் வரும்போது ஒரு முறையாவது இந்த பாடல் வரிகளை படித்து விடுங்கள். அந்த காலத்தில் எல்லாம் ஒரு நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது இந்த பாடல் வரிகளை படித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல காரியம் நடக்கும் போது இந்த பாடல் வரிகளை படித்தால் அந்த நல்ல காரியத்தின் மூலம் உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்து வந்தது. இந்த பாடல் வரிகளை தினமும் படிக்கும் போது இன்னும் இன்னும் சிறப்பான பலனை நம்மால் பெற முடியும் சரி அது என்ன பாடல் வரிகள்.

- Advertisement -

பெரும்பாலும் இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரியாது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். திருஞானசம்பந்தர் அருளிய திருமுறை பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.

மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே.

- Advertisement -

எட்டு வரி பாடல் தான். சுலபமான தமிழில் இருக்கக்கூடிய பாடல் வரிகள் தான். இந்த மண்ணில் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை நினைத்து இந்த பாடலை பாடினாலே போதும். பிறந்தநாளுக்கு திருமண நாளுக்கு என்று கேக் வெட்ட நாம் மறப்பது கிடையாது. அதில் என்ன நன்மை இருக்கிறது என்பது நமக்கும் தெரியாது.

நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாது. ஆனால் விசேஷ நாட்கள் என்றால் இந்த பதிகத்தை பாட வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் நமக்கு வலியுறுத்தி இருக்கிறார்கள். இது தெரியாமல் எதற்குமே பிரயோஜனம் இல்லாத ஒரு கொண்டாட்டத்தை நாம் கொண்டாடி வருகின்றோம்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

இனிமேலாவது பதிகங்களின் மகத்துவத்தை அறிவோம் அதை பின்பற்றுவோம் நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லித் தருவோம். வாழ்வில் தினம் தினம் வரும் போராட்டங்களை சுலபமாக கடந்து செல்லலாம். தினம் தினம் நீங்கள் நல்லபடியாக மண்ணில் வாழ இந்த ஒரு பதிகமே போதுமானது என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -