குழந்தை பாக்கியத்தை அருளும் விநாயகர்

vinayagar mother and child
- Advertisement -

முழு முதல் கடவுளான விநாயகருக்கு ஆலயங்கள் இல்லாத இடமே கிடையாது. சாதாரண மரத்தடி தொடங்கி மிகப்பெரிய மலை வரை இவர் இல்லாத இடத்தை நம்மால் பார்க்க கூட முடியாது. அப்படியான இந்த விநாயகருக்கும் முக்கியமான சில தளங்கள் உள்ளது. அதிலும் மிக முக்கியமானதாக கருதப்படுவது தான் இந்த உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்தில் உள்ள விநாயகரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குழந்தை வரம் அருளும் உச்சிஷ்ட கணபதி

இந்த ஆலயம் ஆனது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்த கோவில் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் பரந்த நிலம் உள்ளது இதை கடந்து சென்றால் உச்சிஷ்ட கணபதியை காண முடியும். இந்த ஆலயம் ஆசியாவிலேயே உச்சிஷ்டை மூல கடவுளாக கொண்ட மிகப்பெரிய கோவிலாக கருதப்படுகிறது.

இது மிகவும் பழமையான கோவில் என்பதை அந்த ஆலயத்தில் சுற்றி உள்ள சுற்றுச்சூழலை பார்த்தால் அனைவருக்கும் விளங்கும். இந்த ஆலயத்தில் இருக்கக் கூடிய விநாயகர் ஒரு பெண்ணின் உபஸ்சலத்தில் தும்பிக்கை வைத்தது போல இருக்கும். இங்கு விநாயக காம சொரூபமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தமிழ்நாட்டில் எந்த விநாயகர் ஆலயத்திலும் இப்படி ஒரு அமைப்பு கிடையாது.

- Advertisement -

அதுமட்டுமின்றி நெல்லையப்பருக்கென இந்த ஆலயத்தில் தனி சன்னதி அமைக்க பெற்றுள்ளது. விநாயகரின் பல்வேறு அவதாரங்களில் இந்த உச்சிஷ்ட கணபதி வடிவமும் ஒன்று ஒரு பெண்ணை ஆளுங்கனும் செய்வது போல காட்சி தருவது மிகவும் அபூர்வம் அப்படி காட்சி தரும் இந்த கணபதியே உச்சிஷ்ட கணபதி என்று சொல்கிறோம்.

இந்த உச்சிஷ்ட கணபதி ஆனவர் குழந்தை வர வேண்டுபவருக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். குழந்தை பேறு அடைவதையும் அந்த குழந்தை தலை சிறந்து விளங்குவதையுமே ஒவ்வொரு தாயும் விரும்புகிறார். அப்படியான ஆசையை நிறைவேற்றி தரக் கூடிய அற்புதமான கணபதியாக இந்த உச்சிஷ்ட கணபதி வீற்றிருக்கிறார்.

- Advertisement -

இத்தனை சிறப்பு அம்சங்கள் அமைந்ததாலே இந்த ஆலயம் விநாயகர் கோவில்களிலே அதிசயமாக கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி ஆசியாவிலே இப்படி ஒரு விநாயகர் ஆலயம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனாலையே திருநெல்வேலி மாவட்டத்திற்கு தனிப்பெரும் சிறப்பு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

இதையும் படிக்கலாமே: வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்க பரிகாரம்

இத்தனை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தை வாய்ப்புள்ளவர்கள் ஒரு முறை சென்று தரிசித்து அவரின் அருளை பெற்று வாருங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நிச்சயம் ஒரு முறையேனும் இந்த ஆலயத்தின் விநாயகரை தரிசியுங்கள்.

- Advertisement -