திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வழிபாடு

perumal3
- Advertisement -

மற்ற கோவில்களுக்கு செல்வது போல இந்த திருப்பதி பெருமாளை, நினைத்த மார்க்கத்தில் போய் பார்க்க முடியாது என்று சொல்லுவோம். அந்த திருப்பதி பெருமாளை நினைத்தால் தான், நம்மால் திருப்பதிக்கு போக முடியும். பெருமாளை தரிசனம் செய்ய முடியும். உங்களுக்கு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கிறதா. கையில் பணமும் இருக்கிறது.

ஆனால் திருப்பதி பெருமாள் எங்களை திருப்பதிக்கு அழைக்கவே மாட்டேங்கிறார் என்ற கஷ்டம் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவு உங்களுக்காக மட்டும் தான். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பவர்கள் எப்படி பிரார்த்தனை செய்து கொண்டால், சீக்கிரம் பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலையும், கூடவே சேர்த்து நம்முடைய வேண்டுதல் நிறைவேற அந்த திருப்பதி உண்டியலில் எந்த பொருளை போட வேண்டும், என்பதை பற்றிய தகவலையும் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

திருப்பதி பெருமாள் தரிசனம்

திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டீர்கள். வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு சனிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு துளசி வாங்கி போடுங்க. விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பெருமாளுக்கு முன்பாக அமர்ந்து ‘பெருமாளே உன்னை தரிசனம் செய்ய நான் திருப்பதிக்கு வர வேண்டும்’ அதற்கான வாய்ப்பை நீ ஏற்படுத்தி தர வேண்டும்.

கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை நடைபயணமாக நடந்து வந்து உன்னை தரிசனம் செய்கின்றேன் என்று சொல்லி, வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். கூடிய சீக்கிரம் உங்களுக்கு திருப்பதிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரார்த்தனை வைத்தது போலவே கிழித்திருப்பதிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் குறையும். மலை ஏறி பெருமாளை தரிசனம் செய்தால் கர்ம வினைகள் அந்த நேரத்திலேயே குறையும் என்பது நம்பிக்கையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நடந்து செல்பவர்கள் புக்கிங் செய்துவிட்டு தான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நீங்கள் அப்படியே பெருமாளை போய் பார்க்கலாம்.

பெருமாளைக் காண தவம் இருந்து இவ்வளவு தூரம் செல்கின்றோம். நம்முடைய வேண்டுதல் நிறைவேற பெருமாள் கோவில் உண்டியலில் எதை போடுவது. திருமணம் நடக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும், குழந்தை வரம் வேண்டும், என்று எவ்வளவோ பெரிய பெரிய வேண்டுதல்கள் நம் மனதில் இருக்கிறது.

- Advertisement -

தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் பெருமாள் உண்டியலில் இந்த 1 பொருளை உங்கள் கையால் போட்டால் போதும். அது என்ன பொருள் தெரியுமா. ‘தங்கம்’ கிலோ கணக்கில் வாங்க வேண்டாம். சவரன் கணக்கில் கூட வாங்க வேண்டாம்.

அந்த காலத்தில் வேண்டுதல் நிறைவேற ஒன்னேகால் ரூபாயை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து வைத்து திருப்பதி உண்டியலில் கொண்டு போய் போடுவார்கள். அதே போல 1.25 மில்லிகிராம் தங்கம் வாங்கிக்கோங்க. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று அந்த தங்கத்தை கொண்டு போய் பெருமாள் கோவிலில் உண்டியலில் போட்டு விடுங்கள். உங்க வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

இந்த 1.25 என்ற கணக்கில் உங்களால் எவ்வளவு தங்கம் வாங்க முடியுமோ அதை நீங்கள் வாங்கலாம். ஒன்னேகால் பவுன் தங்கத்தை கூட கொண்டு போய் திருப்பதி உண்டியலில் போடலாம். அது உங்களுடைய நிதி நிலவரத்தை பொருத்தது. எளிமையான மேல் சொன்ன இந்த சின்ன பெருமாள் வழிபாடு உங்களுக்கு பெரிய அளவில் வாழ்வில் வெற்றிகளை பெற்று தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -