காணாமல் போனவை மீண்டும் உங்களை வந்து சேர மூன்று நாட்கள் இப்படி தீபத்தை ஏற்றினால் போதும். நீங்கள் இழந்தது எதுவானாலும் உங்களை நிச்சயம் வந்து சேர்ந்து விடும்.

- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் ஒவ்வொரு பொருளையும் சம்பாதித்து சேர்த்து வைப்பதற்கு எவ்வளவு பாடுபட வேண்டும் என்பது ஒவ்வொருவரும் அறிந்ததே. அப்படி பாடுபட்டு சேர்த்த பொருள்கள் சில நேரம் நம்மை அறியாமல் தவற விட்டு விடுவோம். அல்லது நம்மிடம் இருந்து யாராவது எடுத்து விடுவார்கள். இப்படி எந்த சூழ்நிலையில் அது தொலைந்து இருந்தாலும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யும் பொழுது தொலைந்த அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை காணாமல் போன எல்லாவற்றையும் மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த பரிகாரம் என்று சொல்லப்படுகிறது. இது பொருள்களுக்கு மட்டுமல்ல நம் வீட்டில் தொலைந்தவர்களை கூட நம்மிடம் தேடிக் கொண்டு வந்து சேர்க்கும் பரிகாரமாகவும் இதை சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு முச்சந்தி அல்லது நான்கு தெருக்கள் கூடும் இடம் வேண்டும். அது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடமாக இருப்பது மிகவும் அவசியம். இதை மட்டும் நீங்கள் கொஞ்சம் தேடி அதற்கான இடமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

யாரும் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஒரு அகல் விளக்கை எடுத்துக் செல்லுங்கள். அது நான்கு திரி போட்டு எரிய விட கூடிய விளக்காக இருக்க வேண்டும். நான்கு தெரு கூடும் இடம் அல்லது முச்சந்தி இந்த இரண்டு ஏதாவது ஒரு இடத்தில் இந்த அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி நான்கு திரிகளும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது இந்த பொருள் என்னிடம் இருந்து தொலைந்து விட்டது இது எனக்கு திரும்ப கிடைக்க வழி காட்டுங்கள் என்றும், அதே போல் வீட்டில் யாரேனும் தொலைந்து இருந்தால் அவர் உங்களுக்கு எந்த ஒரு உறவுமுறை என்பதை சொல்லி அவர் திரும்ப வர வழிபட்டுங்கள் என்று சொல்லி வேண்டி இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும் ஏற்றும் நேரம் மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள்ளாக ஏற்றி விடுங்கள். இந்த மூன்று நாட்களும் நீங்கள் புதிதாக தான் எண்ணெய், அகல் கொண்டு சென்று ஏற்ற தீபம் வேண்டும்.

இந்த பரிகாரத்தை பொருள்கள் இழந்த ஒரு சில தினங்களுக்குள் செய்தால் நல்லது அல்லது 21 நாட்களுக்குள்ளாக செய்து விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்ய உகந்த நாட்கள் சனி அல்லது செவ்வாய் இந்த இரண்டு நாட்களில் இதை செய்யும் போது நிச்சயமாக தொலைந்த பொருளோ, நபரோ உங்களை தேடி வருவார் அல்லது இருக்கும் இடம் பற்றி உங்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் தகவல் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை மணி பர்ஸில் வைத்துக் கொண்டால் உங்களை பகைத்து கொண்டு யாராலும் இருக்க முடியாது தெரியுமா?

இழந்த பொருட்கள் திரும்பப் பெறுவது என்பது எத்தனை பெரிய காரியம் என்பது இழந்த அனைவருக்கும் தெரியும். இந்த ஒரு சின்ன தாந்த்ரீக பரிகாரத்தை செய்யும் போது அது நமக்கு கிடைக்கும் என்றால் நம்பிக்கையுடன் செய்து பார்க்கலாம் தானே. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -