இழுத்து மூடும் நிலையில் உள்ள வியாபாரம் கூட சூடு பிடித்தது லட்ச லட்சமாக லாபத்தை சம்பாதிக்க இந்த ஒரு பொருளை தானமாக தந்தாலே போதும்.

thanam
- Advertisement -

ஒரு தொழிலை நடத்தி அதில் முன்னுக்கு வருவது எல்லாம் சாதாரண விஷயமே கிடையாது நம்முடைய வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் முதலாக போட்டு தான் ஒரு தொழிலையோ வியாபாரத்தையும் தொடங்க வேண்டும் அப்படி தொடங்கிய தொழில் நன்று நல்ல முறையில் நடந்தால் மட்டுமே நாம் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய முடியும் ஆரம்பித்த தொழில் நல்ல முறையில் நடக்காமல் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால் தொழில் மட்டும் உண்டு வாழ்க்கையில முடங்கிப் போய் விடும்.

இப்படி தொழில் தொடங்கி அதில் நஷ்டம் ஏற்பட்டு ஒன்றுமில்லாமல் போன குடும்பங்கள் ஏராளம் உண்டு.இந்த நிலை மாறி வியாபாரம் சூடு பிடித்து நன்றாக நடக்க இந்த ஒரு தானத்தை தவறாக செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன தானம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வியாபாரம் நல்லபடியாக நடக்க
வியாபாரம் நல்ல முறையில் நடக்க முதலில் நம்முடைய முயற்சியையும் உழைப்பையும் செலுத்த வேண்டும். அந்தத் தொழில் அல்லது வியாபாரம் பற்றியான தெளிவான சிந்தனையும் அறிவும் நமக்கு இருக்க வேண்டும். அதை மேற் கொண்டு நல்ல முறையில் நடத்தி செல்வதற்காக அடுத்தடுத்த முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சரிவர செய்தும் சில சமயங்களில் தொழிலில் முடக்கம் ஏற்பட்டு விடுகிறது. அப்படியானவற்றை சரி செய்ய தான் இந்த பரிகாரம்.

இந்த பரிகாரத்திற்கு நாம் ஒரு பொருளை தானமாக கொடுத்தால் மட்டும் போதும் என்று சொல்லப்படுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை துவரம் பருப்பு தான். இந்த துவரம் பருப்பு செவ்வாய்க்கிழமை அன்று வாங்கி இல்லாத ஏழை எளியவருக்கு தானமாக தர வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்திற்குரிய நாள். அந்த கிரகத்துக்கான ஒரு பொருளினில் அது துவரம் பருப்பு. வியாபாரம் தொழிற் ஸ்தானங்கள் நல்ல முறையில் முடக்கம் ஏற்படாமல் இருக்க செவ்வாய் பகவானுடைய பரிபூரண அருள் நமக்கு கிடைக்க வேண்டும். அந்த அருளை பெறுவதற்காகத் தான் இந்த பொருளை நாம் தானமாக கொடுக்க வேண்டும். இப்படி தானமாக தரக் கூடிய துவரம் பருப்பை வாங்கி அப்படியே கொடுத்து விடக் கூடாது.

இந்தப் பருப்பை வாங்கி நன்றாக சுத்தம் செய்து அதில் இருக்கும் கல், தூசி ஆகியவற்றை நீக்கிய பிறகு தானம் செய்ய வேண்டும். தானமாக கொடுக்கக் கூடிய பொருள் தானே என்று ஏனோ தானோ என்று செய்யக் கூடாது. நம்முடைய வியாபாரம் நல்ல முறையில் நடந்து நம் குடும்பம் நல்ல நிலையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த தானத்தை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

இதையும் படிக்கலாமே: வெறும் ஐந்து ரோஜா பூ இருந்தால் போதும். ஐந்து தலைமுறை கடனைக் கூட ஐந்தே நாட்களில் அடைத்துவிட்டு ஐஸ்வர்யத்தோடு வாழலாம்.

இந்த தானத்தை எத்தனை வாரம் கொடுக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. உங்கள் தொழில்நிலை முன்னேற முன்னேற இந்த தானத்தை செய்து கொண்டே இருங்கள். மேலும் பல முன்னேற்றங்கள் சந்தித்துக் கொண்டே செல்லலாம். இந்த தானத்தை செய்ய ஆரம்பித்தவுடன் உங்களுடைய தொழிலோ வியாபாரமும் நல்ல முன்னேற்றத்தை காணும் என்பதை சந்தேகமே இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தானத்தை செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -