விடாமல் துரத்தும் பிரச்சனைகளில் இருந்து விலகி காலபயம் இன்றி வாழ கால பைரவரை நாளை தேய்பிறை அஷ்டமியில் வீட்டில் இருந்தபடியே இந்த ஒரு மந்திரத்தை சொல்லி வழிபட்டாலே போதும்.

lamp-bhairavar
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தினம் தினம் சந்தித்து கொண்டு தான் வாழ்கிறான். இப்படியான வாழ்க்கையில்  பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளித்து வாழ போகிறோம் என்ற அச்சம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. இந்த அச்சத்தை போக்கி பிரச்சனைகளில் இருந்து நம்மை சுலபமாக வெளியேற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த தெய்வங்களில் காலபைரவர் முக்கியமான இடத்தில் உள்ளார். அப்படியான இந்த கால பைரவரை எப்படி நாம் வீட்டில் இருந்தே வணங்கி நம்முடைய பிரச்சனைகளிலிருந்து வெளிவரலாம் என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பிரச்சனை தொல்லை கடன் இவற்றிலிருந்து வெளிவர கால பைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் வரும் கால பைரவர் வழிபாடு அனைவரும் அறிந்த ஒன்றே. அதுவும் சிறப்புமிக்க இந்த ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமையில் 8.8.23 வரக்கூடிய இந்த தேய்பிறை அஷ்டமி ஆனது மிகவும் விசேஷமானதாக சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை நாளை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். அஷ்டமி காலை 10:30 மணிக்கு தொடங்குவதால் அதன் பிறகு தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அதிலும் அதிலும் 12 மணியில் இருந்து 1.30 மணி வரையிலான இந்த வழிபாடு அதிக சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி கால பைர வரை வணங்க உகந்த நேரமாக இந்த உச்சி காலத்தை குறிப்பிடுகிறார்கள்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்ய நாளை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்களுடைய அஷ்டமி விரதத்தை தொடங்கி விடுங்கள். இதற்காக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது கிடையாது அசைவம் உண்ணாமல் இருந்தாலே போதும். வீட்டில் பைரவர் படம் இருந்தால் செவ்வரளி மலர்களால் மாலை தொடுத்து போடுங்கள். அப்படி இல்லாத பட்சத்தில் நம் வீட்டில் பூஜையறையில் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு அந்த தீபத்தை சுற்றி செவ்வரளி மலரை வைத்து விடுங்கள். அது கிடைக்காத பட்சத்தில் செம்பருத்தி மலரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நெய்வேத்தியமாக மிளகு சேர்த்த ஏதேனும் மிளகு சாதம், மிளகு வடை, மிளகு பொங்கல் இவற்றில் ஏதேனும் ஒன்று. இத்துடன் தேங்காய் பழம் பூ போன்றவற்றை எல்லாம் வைத்து தீபம் ஏற்றி வைத்து விளக்கின் முன் அமர்ந்து பைரவரை மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய எந்த பிரச்சனை தீர வேண்டுமோ அதை எல்லாம் மனம் உருகி இந்த தீபத்தின் முன் அமர்ந்து வேண்டிக் கொள்வதோடு இந்த ஒரு மந்திரத்தையும் சொல்லுங்கள்.

- Advertisement -

மந்திரம்
“ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லி பைரவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேளை இப்படி இந்த நேரத்தில் உங்களால் வீட்டில் இருந்த வழிபாடு செய்ய முடியவில்லை எனில் மாலை 6 மணிக்கு கோவிலில் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடை செய்து கொள்ளலாம். உங்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இது மூலம் நிச்சயம் தீர்ந்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

காலபைரவருக்கு என்று தனியாக இருக்கும் ஆலயங்களில் சென்று வழிபாடு செய்வது சிறப்பு இல்லாத பட்சத்தில் சிவாலயங்களில் நிச்சயம் பைரவர் இருப்பார். அங்கு சென்று வழிபாடு செய்து கொள்ளலாம். அந்த நேரத்தில் அர்ச்சனை செய்தால் மிகவும் சிறப்பு இல்லை என்றால் இந்த செவ்வரளி மலர்களை சாற்றிய பிறகு கட்டாயமாக எலுமிச்சை பழத்தை வைத்து வணங்கு ங்கள் கால பைரவருக்கு இந்த எலுமிச்சை வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எந்த பூஜை பரிகாரம் செய்தாலும் நம் கஷ்டம் தீரவில்லையே என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று இப்படி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.

ஒரு சிலர் எப்போதும் ஒரு விதமான அச்ச உணர்வு உடனே இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளி வரப் போகிறோம் என்ற பயத்திலும் உழன்று கொண்டிருப்பார்கள். அப்படியானவர்களின் பயத்தை நீக்கி அவர்களின் கால பயம் சிறிதும் இன்றி வாழ வைக்க இந்த காலபைரவர் வழிபாடு மிகச் சிறந்த பலனை தரும். நம்பிக்கையுடன் வழிபட்டு பிரச்சனைகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -