எந்நேரமும் சஞ்சலத்தில் இருக்கும் மனதை சாந்தி படுத்தவும், குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்கவும் சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை கூறினால் போதும். மனம் தெளிந்த நீரோடை போல மாறி விடும்.

sivalingam manthiram
- Advertisement -

மனிதர்கள் என்ன தான் பணத்திற்கு பின்னால் ஓடி பணத்தையும் நிறைய சம்பாதித்தாலும், நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட நிம்மதியை நம்மால் வெளியில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. அந்த நிம்மதி கிடைக்க கடவுள் வழிபாடு சிறந்ததாக விளங்குகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நிம்மதி கிடைக்க சிவபெருமானுக்குரிய மந்திர வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கும் இறைவனாக சிவபெருமான் திகழ்கிறார். அந்த சிவபெருமானை நாம் அனுதினமும் நினைத்து வந்தால் மறுபிறவி என்பதே இருக்காது என்று பலரும் கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் நாம் வேண்டும் வரத்தை அருளக் கூடிய கடவுளாகவும் அவர் திகழ்கிறார். நம் வீட்டில் இருக்கக் கூடிய குழப்பங்கள் அகல்வதற்காக வீட்டிலேயே நாம் செய்யக் கூடிய சிவ பூஜையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

மனக்குழப்பம் தீர வழிபாடு
இந்த பூஜையை நாம் அனுதினமும் செய்யலாம் அல்லது வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம் அல்லது பிரதோஷ நாட்களில் அல்லது அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் செய்யலாம். நாம் பூஜை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டு பூஜை அறையில் இருக்கக் கூடிய சிவலிங்கத்திற்கு அல்லது சிவபெருமானின் புகைப்படத்திற்கு இந்த வழிபாட்டு முறையை நாம் மேற்கொள்ளலாம்.

சிலர் தங்கள் வீடுகளில் சிவபெருமானின் புகைப்படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ வைத்து வழிபடும் பழக்கம் இல்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் இருக்கக் கூடிய ஏதேனும் ஒரு தெய்வத்தின் புகைப்படத்திற்கோ அல்லது உருவத்திற்கோ இந்த பூஜையை செய்யலாம்.

- Advertisement -

ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து அதில் சுத்தமான நீரை வைக்க வேண்டும். அந்த நீரில் நம்மால் இயன்ற அளவு வில்வ இலைகளை போட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான சங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். சங்கு இல்லாதவர்கள் பஞ்சபாத்திரத்தில் இருக்கக் கூடிய கரண்டியை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதை வைத்து சிவலிங்கத்திற்கு “ஓம் நமசிவாய” என்று கூறியவாறு அந்த நீர் முழுவதையும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறகு அதில் இருக்கும் வில்வ இலைகளை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். புகைப்படமாக இருப்பேன் அந்த புகைப்படத்திற்கு முன்பாக வேறு ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தில் அபிஷேகம் செய்யலாம். அபிஷேகம் செய்த அந்த தீர்த்தத்தை சேகரித்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் தெளிக்க வேண்டும்.

இந்த “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் நம்முடைய மனம் தெளிவு அடைகிறது. மேலும் மனதிற்குள் இருக்கக் கூடிய குழப்பங்கள் நீங்கி நல்ல எண்ணமும், ஞானமும் பிறக்கும். இந்த தீர்த்தமானது வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கும். நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி பாருங்கள். வாழ்க்கை உள்ள இன்னல்கள் எல்லம் கண்முன்னே காணாமல் போகும்.
இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து மேற் கொண்டு வர வீட்டில் இருக்கக் கூடிய குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். தடைகள் அகழும். காரிய சித்தி ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களையும் பெற்று நலமோடு வாழலாம்.

- Advertisement -