துர் சக்திகளை விரட்டும் தூபம்

thoopam
- Advertisement -

கோவிலுக்கு இணையாக கருதப்படுவது தான் வீடு. கோவிலுக்கு செல்வதன் மூலம் எந்த அளவுக்கு மனதிற்கு அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறதோ அதே அளவிற்கு வீட்டிற்கு செல்லும் பொழுதும் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் அதற்கு நேர் மாறாக பிரச்சனைகளும், சண்டைகளும், நிம்மதி இம்மையும் ஏற்பட்டால் அதற்கு வீட்டில் இருக்கக்கூடிய துர் சக்திகளை காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட துர் சக்திகளை வீட்டை விட்டு விரட்டுவதற்கு போடக்கூடிய தூபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாகவும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் எதிராகவும் இருக்கக் கூடிய ஒரு சக்தியை தான் நாம் துர்சக்தி என்று கூறுகிறோம். இப்படி நம்முடைய முன்னேற்றத்தில் சந்தோஷத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த வகையான தீய சக்திகளாக இருந்தாலும் அந்த சக்திகளை விரட்டியடிப்பதற்கு தெய்வங்களின் துணை கண்டிப்பான முறையில் தேவை.

- Advertisement -

அந்த தெய்வங்களை வீட்டிற்கு வரவழைத்து வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட சக்திகளை விரட்டியடிக்க கூடிய அற்புதமான தூபமுறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கவும் துர்சக்திகள் விலகிச் செல்லவும் நாம் பல பரிகாரங்களை மேற்கொண்டாலும் இந்த எளிய தூபம் முறை என்பது மிகவும் அற்புதமான பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் தூபம் போடும் பழக்கம் என்பது இருக்கும்.

அவ்வாறு தூபம் போடும் பொழுது வெறும் சாம்பிராணியை மட்டும் போடாமல் அதனுடன் தெய்வீக அம்சம் பொருந்திய மூலிகைகளையும் நாம் சேர்த்து போடுவதன் மூலம் அந்த மூலிகைகளின் பலனால் வீட்டில் இருக்கக்கூடிய துர் சக்திகள் அனைத்தும் விலகி ஓடுவதோடு மட்டுமல்லாமல் தெய்வ சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரவும் அது உதவி புரிகிறது. இப்படி நாம் மூலிகை தூபம் போடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய துர்சக்திகள் விலகுவதோடு மட்டுமல்லாமல் வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் அந்த தூபத்தை உள் இழுப்பதால் அவர்களுக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கிய ரீதியாக பல நன்மைகளும் ஏற்படும்.

- Advertisement -

இந்த தூபத்தை நாம் போடுவதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். வலம்புரிக்காய், கோஷ்டம், விரலி மஞ்சள். இவை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து சாம்பிராணி தூபம் போட்டு வீட்டின் மூளை முடுக்குகள் மற்றும் கதவுகளின் பின்புறம் என்று ஒரு இடம் கூட விடாமல் அனைத்து இடங்களிலும் தூபம் போட வேண்டும். இந்த தூபத்தை போடும் பொழுது குடும்ப நபர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது போல் பார்த்துக் கொள்வது மிகவும் விசேஷமாக இருக்கும்.

இப்படி வீடு முழுவதும் தூபம் போட்டு முடித்த பிறகு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபர்களும் அந்த தூபத்தில் தங்கள் முகத்தை நன்றாக காட்டி அந்த தூபத்தை சிறிதளவு உள்ளுக்குள் இருப்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் தீய சக்திகளும் விலகும்.

இதையும் படிக்கலாமே: நிலத்தை விற்க பரிகாரம்

மருத்துவ மற்றும் மகத்துவமான மூலிகை பொருட்களாக திகழக்கூடிய வலம்புரிக்காய் மற்றும் கோஷ்டம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் இதை வாங்கி பயன்படுத்தி தங்கள் இல்லத்தில் இருக்கக்கூடிய தீய சக்திகளை விரட்டியடிக்கலாம்.

- Advertisement -