நிலத்தை விற்க பரிகாரம்

murugan valipadu
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சம்பாதிக்க ஆரம்பித்த உடனே செய்யக்கூடிய செயலாக இருப்பது சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்பதுதான். தன்னுடைய சம்பாத்தியத்தை சிறுக சிறுக சேமித்து வைத்து தன்னுடைய பெயரில் சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இந்த சொத்துக்களை வாங்கிய பிறகு ஏதோ ஒரு சூழ்நிலைக்காக அதை விற்க வேண்டும் என்று முயற்சி செய்தால் பலரால் அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் முருகப்பெருமானை நினைத்து இப்படி பரிகாரம் செய்தால் கண்டிப்பான முறையில் அவர்களின் இடம் நல்ல விலைக்கு விற்கப்படும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நிலம், இடம், வீடு, மனை, வாசல் என்று எது இருந்தாலும் அது அனைத்திற்கும் செவ்வாய் பகவானே காரகனாக திகழ்கிறார். அவரின் அருள் பார்வை இருந்தால்தான் நம்மால் புதிதாக எந்த ஒரு இடத்தையும், வீட்டையும், நிலத்தையும் வாங்க முடியும். அதே போல் தான் அவருடைய அருள் நமக்கு இருந்தால்தான் இந்த சொத்துக்களை நம்மால் நல்ல விலைக்கு விற்கவும் முடியும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மைதான் என்றாலும் அனைவரும் சொந்த வீடு வாங்குவதற்காக முருகப்பெருமானை வழிபடுவார்.

அதேபோல் தன்னுடைய நிலமும், இடமும் நல்ல விலைக்கு விற்க வேண்டும் அல்லது விற்பதில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்றாலும் முருகப்பெருமானை தான் வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று ஒரு மஞ்சள் நிற துணியில் எந்த இடத்தை நாம் விற்க வேண்டுமோ அந்த இடத்தில் இருக்கக் கூடிய மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஆறு ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து அதை மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டையை வீட்டில் பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமையோ அல்லது பௌர்ணமி நாளிலோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அந்த மூட்டையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து முருகன் கோவிலில் இருக்கும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விட வேண்டும்.

பிறகு அந்த மூட்டையில் இருக்கும் மண்ணை கடலில் கரைத்து விட்டு அந்த துணியையும் கடலிலேயே போட்டு விட வேண்டும். இப்படி செய்த பிறகு முருகப்பெருமானை வழிப்பட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே அந்த இடம் நல்ல விலைக்கு விற்பனை ஆகும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக உதவும் தீபம்

எந்த ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அதற்கு கடவுளின் முழு அனுக்கிரகமும் தேவை என்று நம்புபவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி தடைப்பட்டு இருக்கும் விற்க முடியாமல் கஷ்டப்படும் இடத்தை நல்ல விலைக்கு விற்கலாம்.

- Advertisement -