உடனடியாக பணக்கஷ்டத்தை தீர்த்து வைக்கும் கோவில்

mahalashmi1
- Advertisement -

உச்சகட்ட பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரம் இது. பணக்கஷ்டத்தை தீர்க்கக் கூடிய முயற்சியை எடுக்கும் போது, முதல் வேலையாக இந்த கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்தா, உங்க பண கஷ்டம் உடனடியாக தீரும். பணக்கஷ்டம் தீர, கடன் சுமை குறைய, வெள்ளிக்கிழமை எந்த கோவிலுக்கு போகணும். எந்த நேரத்தில் போகணும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

பணக்கஷ்டம் தீர்க்கும் அஷ்டலட்சுமி கோவில்

பகலில் தூங்கக் கூடாது. நீங்கள் உழைக்கின்ற நேரத்தை அப்படியே இரட்டிப்பாக மாற்ற வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் நறுமணத்தோடு இருக்க வேண்டும். வீடும் நறுமணத்தோடு இருக்கணும். நீங்களும் நறுமணத்தோடு இருக்கணும். மனசுக்குள் சோம்பேறித்தனம் ஒரு துளி கூட வரக்கூடாது.

- Advertisement -

இந்த வேலையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் நீங்கள் நினைக்க கூடாது. முழு உழைப்பையும் முதலீடாக போட்டு, முழு முயற்சியையும் முதலீடாக வைத்து உங்கள் கடமைகளை செய்து கொண்டே வாருங்கள். கூடவே இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தீங்கன்னா உடனடியா உங்க பண கஷ்டம் தீர்ந்திடும்.

பணக்கஷ்டம் தீர செல்ல வேண்டிய கோவில்

விஜயவாடாவில் இருக்கும் கனகதுர்கை கோவில். இந்த கோவிலில், துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்த சந்தோஷத்தில் தங்க மழையை பொழிய செய்ததாக ஒரு ஐதீகம் இருக்கிறது. ஆகவே இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் உங்களுக்கும் செல்வம் மழை பொழியும். விஜயவாடா கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னையில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

- Advertisement -

ஆந்திராவில் இருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும்,  விஜயவாடாவுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் ரொம்பவும் பணக்கஷ்டத்தில் சிக்கி தவிப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வரவும். இத்திருத்தலத்தில் இந்த கனகதுர்க்கை அம்பாள் அஷ்டலக்ஷ்மிகளுக்கு நடுவில் அமர்ந்து அருள் பாதிப்பதால் அத்தனை சிறப்புகள் உள்ளது. இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் சென்று அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.

அவ்வளவு தூரம் சென்று அந்த அம்பாளை வழிபட முடியாதவர்கள் அடையாறில் இருக்கும் அஷ்டலட்சுமி கோவிலுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரத்தில் சென்று மகாலட்சுமியை வழிபாடு செய்துவிட்டு வர உங்கள் பண கஷ்டம் உடனடியாக தீரும். இந்த கோவிலுக்கு நீங்க போய் அந்த அஷ்டலட்சுமிகளையும் தரிசனம் செய்து விட்டு வந்தால் அப்படியே செல்வ வளங்களை மகாலட்சுமி உங்களுக்கு வாரி கொடுத்தது போல ஒரு மன திருப்தி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க வழிபாடு

எல்லோராலும் எளிதாக வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் இந்த அம்பாளை தரிசனம் செய்து விட முடியாது. உங்களுக்கு பணக்கஷ்டம் தீரக்கூடிய நேரமும் காலமும் வந்துவிட்டது என்னும் சமயத்தில் தான் இப்படிப்பட்ட ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் உங்கள் கண்களில் படும் காதில் கேட்கும்.  நல்ல காலமும் கைக்கூடி வரும். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -