உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில் சுக்குநூறாக உடைந்து சிதறி விடும். இந்த 3 பொருளை ஒன்றாக சேர்ந்து நிலை வாசலில் கட்டினால்.

vasal-home-vilakku
- Advertisement -

வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் வெடி வெடிப்பது போல ஒரு நொடியில் சுக்குநூறாக வெடித்துச் சிதறி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாயாஜால வித்தை போட்டாலும் கஷ்டங்கள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் நம்மால் சரி செய்யவே முடியாது. நம் காலம், அதாவது நாம் இந்த பூமியில் இருக்கும் கடைசி நிமிடம் வரை கஷ்டங்களும் நம்மோடு இருக்கத்தான் செய்யும். இது இயற்கையாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் தான். ஆகவே கஷ்டத்தைத் கண்டு ஒரு பொழுதும் கவலைப்படவே கூடாது. கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதற்காக நமக்கு இருக்கக்கூடிய சந்தோஷத்தை ஒருபோதும் இழக்கக் கூடாது என்பதை மனதில் ஆழ விதைத்து வைத்துக் கொண்டு, இந்த பதிவுக்குள் செல்வோம்.

uppu

கஷ்டத்திற்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கல்லுப்பு அவதாரம் எடுத்ததோ என்னமோ? கல் உப்பை வைத்து நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் ஏராளம். அந்த வரிசையில் இன்றும் நாம் உப்பை வைத்து தான் ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம். உப்பை சுற்றி போட்டால் கண் திருஷ்டி போகும். உடல்நிலை சரி ஆகும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அப்போது நிச்சயம் இந்த பரிகாரமும் உங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்புங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய காட்டன் வெள்ளை துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் கல் உப்பு, 1 ஸ்பூன் இந்து ஸ்பூன், ஒரு ஸ்பூன் வெடியுப்பு இந்த மூன்று உப்பையும் சேர்த்து கலந்துவிட்டு ஒரு முடிச்சாக கட்டி இதை அப்படியே உங்கள் நிலை வாசலில் தொங்க விட்டு விடுங்கள். வெடிஉப்பு என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

vediuppu

உங்களுடைய வீட்டில் முன் வாசல், பின் வாசல் என்று இரண்டு வாசல்கள் இருந்தால், இரண்டு வாசலிலும் இந்த உப்பு மூட்டை கட்டி தொங்க விடலாம். பழைய மூட்டையை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது. 6 மாதத்திற்கு ஒருமுறை பழைய உப்பை தண்ணீரில் கொட்டி விட்டு, மீண்டும் அந்த துணியை துவைத்து புதிய உப்பை வைத்து முடிச்சு போட்டு கட்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த 3 உப்பை சேர்த்து நிலை வாசலில் கட்டுவதன் மூலம் என்ன பயன். உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழையாது. உங்கள் வீட்டில் நிலை வாசலில் இருந்து ஒரு பத்தடி தூரத்தில் தான் கெட்ட சக்தி நிற்கும். உங்கள் வீட்டினை கெட்டது நெருங்க நினைத்தாலும் அந்த எதிர்மறை ஆற்றல் ஆனது நிச்சயம் வெடித்து சிதறிவிடும்.

indhu-salt

இதேபோல் வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்சனை, மன பிரச்சனை, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, சுபகாரியம் நடப்பதில் தடை, குழந்தைகளின் மூலம் பிரச்சனை என்று எப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனையை படிப்படியாக சரி செய்யக் கூடிய சக்தியும் இந்த உப்பு முடிச்சுக்கு உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

தினமும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஊதுபத்தி ஏற்றும் போது, வாசலில் இந்த உப்பு முடிச்சுக்கு ஊதுபத்தியை காண்பித்து கொள்ளுங்கள். அது போதும். இந்த உப்புமூட்டை உங்களை பாதுகாக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -