நாளை வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்

vinayagar
- Advertisement -

சூரியன் மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவானுக்குரிய ரிஷப ராசிக்கு இடம் பெயரும் மாதமே வைகாசி மாதம் ஆகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ரிஷப ராசி என்பது சந்திர பகவானின் உச்ச ராசியாக இருக்கிறது. எனவே தான் வைகாசி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று சந்திரன் முழுமையான அளவில் காட்சி தருகிறது. இறை வழிபாடு இன்ன பிற தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற மாதமாக இந்த வைகாசி மாதம் இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற ஒரு சிறப்பான தினம் வைகாசி சங்கடஹர சதுர்த்தி தினம். சங்கடஹர சதுர்த்தி என்றாலே விநாயகர் வழிபாட்டுக்குரிய தினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த விநாயகரை வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vinayagar

வைகாசி மாதம் இறை வழிபாடு மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வைகாசி பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் வைகாசி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த வைகாசி சங்கடஹர சதுர்த்தி. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு அனைத்திலும் வெற்றிகள் ஏற்படும்.

- Advertisement -

வைகாசி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

vinayagi

வைகாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இதை மட்டும் செய்தால் சீக்கிரம் வேலை கிடைக்கும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi sankatahara sathurthi in Tamil. It is also called as Vaikasi matham in Tamil or Vaikasi theipirai sathurthi in Tamil or Vinayagar valipadu in Tamil or Vaikasi matha sirappugalin Tamil.

- Advertisement -