தன ஆகர்ஷண வராகி மந்திரம்

varahi
- Advertisement -

வாராகி வழிபாடு என்பது எதிரிகளை அழிப்பதற்கு மட்டும் கிடையாது. ஏவல் பில்லி கண் திருஷ்டியை நீக்குவதற்கு மட்டும் கிடையாது. வாராகி தாய் எதிரிகளை, கண் திருஷ்டியை ஏவல் பில்லி சூனியத்தை அழித்து வெற்றியை கொடுப்பதோடு சேர்த்து, நமக்குத் தேவையான தன தானியங்களையும் கொடுப்பாள்.

உங்களுக்கு வாராகியை வழிபாடு செய்ய பிடிக்கும். வராகி அம்மன் வழிபாடு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்றால் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்குத்தான். குறிப்பாக பெண்கள் வராகி அம்மன் வழிபாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வாராஹி அன்னையை கும்பிட்டு உங்கள் குடும்பம் நிதி நிலைமையில் முன்னேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், நிச்சயம் அது நடக்கும். நீங்கள் பெண்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு பண தேவை இருக்கிறது.

நீங்களும் ஏதாவது தொழில் செய்யணும் அல்லது வேலைக்கு போகணும் சம்பாதிக்கணும் என்று நினைத்தால், உங்கள் வாயால் தினமும் இந்த மந்திரத்தை சொன்னீர்கள் என்றால், உங்கள் பண வரவுக்கு தேவையான வாய்ப்புகளை அந்த வாராகி தேவி நிச்சயம் காட்டிக் கொடுப்பாள். ஆண்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம் தவறு கிடையாது. உடல் சுத்தம் மன சுத்தத்தோடு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாராகியின் தன ஆகர்ஷன மந்திரம்

வீட்டில் வராகி அன்னையின் திருவுருவப்படம் இருந்தால், சிலை இருந்தால் அதற்கு முறையான வழிபாடுகளை முடித்துவிட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வாராகித் தாயின் முன்பு தினமும் 54 முறை அல்லது 108 முறை இந்த மந்திரத்தை சொன்னால், உங்களுடைய வீட்டில் செல்வ வளம் பெருகும். செல்வ வரவுக்கு உண்டான வழியை அந்த வாராகித் தாய் காண்பித்துக் கொடுப்பாள். உங்களுக்கான வராகி தன ஆகர்ஷண மந்திரம் இதோ.

“ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹ:”

இதையும் படிக்கலாமே: பௌர்ணமி அன்று பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

வராகித் தாயின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடர் தான் வராகித்தாய் என்று நினைத்த இந்த மந்திரத்தை நம்பிக்கையோடு சொல்லுங்கள். தினமும் சொல்ல முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது இந்த மந்திரத்தை சொல்லுங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -