4 வர மல்லி இருந்தால் போதும். எதையும் உங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம். வர மல்லியில் மறைக்கப்பட்டுள்ள ரகசியம் என்ன? உங்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

dhaniya
- Advertisement -

அந்த காலத்திலிருந்தே தனியா, தாந்திரீக ரீதியாக நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நம்முடைய முன்னோர்கள், குறிப்பாக நம்முடைய பாட்டிமார்கள் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் பணத்தை சேர்த்து வைப்பார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். சமையலறையில், இந்த வரமல்லியை போட்டு வைத்திருக்கும் டப்பாவில் பணத்தை சேர்த்து வந்தால் பண வசியம் ஏற்படும் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியாது.

இந்த வரமல்லி என்று சொல்லப்படும் தனியாவில் வசிய சக்தி அதிகமாகவே உள்ளது. இந்த வர மல்லியோடு எந்த பொருளை சேர்த்து வைக்கின்றமோ அந்தப் பொருள் நமக்கு வசியமாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் பணம் சேர்த்து வைக்கும் டப்பாவில் நான்கு தனியா விதைகளை எடுத்து போட்டு வையுங்கள். நீங்கள் அந்த டப்பாவில் சேர்த்து வைக்கக் கூடிய பணம் உங்கள் வசியம் ஆகும். அதாவது அந்த டப்பாவில் பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் சமையலறையில் சமையலுக்காக பயன்படுத்தும் வரமல்லி டப்பாவுக்கு உள்ளே ஒரு கவரில் பணத்தைப் போட்டு சுற்றி வைத்தாலும் அந்த பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

அடுத்தபடியாக இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போவதற்கு காரணம் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாததுதான். இப்படி எந்த வீட்டில் கணவன் மனைவிக்கு ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றதோ, அந்த கணவனின் பெயரையும் மனைவியின் பெயரையும் ஒன்றாக ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி சுருட்டி ஒரு டப்பாவில் போட்டு கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு வர மல்லியையும் போட்டு, காற்று உள்ளே புகாதபடி மூடி இந்த டப்பியை யார் கண்ணுக்கும் தெரியாமல் எடுத்து வைத்துவிடுங்கள்.

- Advertisement -

நிச்சயம் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன்-மனைவி ஒன்றாக சேர்ந்து அன்னியோன்னியமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ தொடருவார்கள். இப்படி இருவரது பெயரை எழுதி வரமல்லி உள்ள டப்பாவில் போட்டு வைத்த ஒரு சில நாட்களிலேயே வித்தியாசத்தை நிச்சயமாக உணர முடியும். பிரிந்த தம்பதியரின் பெயரை எழுதிப் போட்டால் கூட அவர்கள் மீண்டும் சேர்வதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

கணவன் மனைவிக்கு மட்டும் இந்த பரிகாரம் அல்ல. சில வீடுகளில் மாமியார் மருமகள், தந்தை மகன், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இப்படி எந்த உறவுகளுக்குள் சண்டை இருந்தாலும் அவர்கள் இருவருடைய பெயரை ஒன்றாக எழுதி ஒரு டப்பாவில் போட்டு, அதன் உள்ளே வர மல்லி விதைகளைப் போட்டு மூடி வைத்து விடுங்கள் போதும். தானாக பிரச்சனைகள் சரியாகிவிடும். குடும்ப ஒற்றுமைக்கும், பண வசிய திருக்கும் இந்த வரமல்லி ஒரு நல்ல வரப்பிரசாதம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -