வீட்டில் வறுமை என்ற வார்த்தை கேட்காமல் இருக்க உங்கள் சமையலறை உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்திடுங்கள். பணத்தட்டுப்பாடு என்பதே இருக்காது

gold-manjal
- Advertisement -

நிம்மதியான வாழ்க்கை என்பது 3 வேளை வயிறார சாப்பிட்டு, மனநிறைவுடன், சந்தோஷமாக வாழ்வது தான். ஆனால் ஒரு சிலருக்கு மூன்று வேளை சாப்பாடு என்பதே மிகவும் கடினமாக இருக்கும். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு அன்றாட வாழ்க்கை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் சாப்பாட்டிற்கு கஷ்டம் இல்லாமல் இருந்தாலும், மனநிம்மதி இல்லாமல் இருப்பார்கள். இவை அனைத்திற்கும் காரணமான ஒன்று பணம் மட்டும் தான். இன்றைய சமுதாயத்தில் பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடிகிறது. இல்லை எனில் பணத்தை தேடித் தேடி மனிதன் தன் வாழ்க்கையை தொலைத்து விடுகிறான். இவ்வாறு செய்வது இன்றைய கட்டாய நிலைமையாக உள்ளது. இல்லையென்றால் ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளி, முன்னேறி செல்கின்றனர். அவ்வாறு பணம் என்பது எப்பொழுதும் நம்மிடம் நிலைத்திருக்க வேண்டும். இப்படி பணத்தட்டுப்பாடு வராமல் இருக்க நாம் செய்ய வேண்டிய ஒரு சூட்சும பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் நம்மிடம் சொல்லி வளர்ப்பது நன்றாக படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல வேலை கிடைத்தால் நல்ல வாழ்க்கை அமையும். இதனைக் கேட்டு வளர்கின்ற பிள்ளைகள் நன்றாகப் படித்து வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை முடித்த பின், கல்லூரிப் படிப்பை முடித்து தனக்கான வேலையைத் தேடி அலைகின்றனர். ஆனால் அவர்கள் நினைத்த வகையில் வேலை என்பது சுலபமாக கிடைப்பதில்லை.

- Advertisement -

தனக்கான வேலையே அமைத்துக் கொள்வதில்லை அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் அப்படி தனக்கான வேலையை அல்லது தொழிலை அமைத்துக் கொண்டு அதில் முன்னேற நினைப்பவர்களுக்கு பலவித தடங்கல்கள் ஏற்படும் என்பதே பெரும் பிரச்சினையாக அமைந்துவிடும் கடன் வாங்கி தொழில் தொடங்கினாலும் அதில் லாபம் காண்பதில் பெரும் சிக்கல் இருக்கும்.

இப்படி அரும்பாடுபட்டு பல பிரச்சனைகளை சமாளித்து நாம் சம்பாதிக்கும் பணத்தை நம்மிடம் தக்க வைக்க வேண்டும். ஒரு சிலர் பணத்தை சம்பாதித்து அதனை வீணாக செலவு செய்வார்கள். இப்படி செலவு செய்துவிட்டு பிற்காலத்தில் புலம்பி கொண்டிருப்பார்கள். இவ்வாறு செய்வதற்கு காரணம் உங்களின் கர்ம பலனாகும்.

- Advertisement -

நீங்கள் செய்த கர்ம வினைகள் உங்களை தெளிவாக யோசிக்க விடாது. நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் பிரச்சனைக்குள் மாட்டிக் கொண்டுதான் இருப்பீர்கள். எனவே முதலில் உங்களை சுற்றியுள்ள எதிர்மறை அதிர்வுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு எதிர்மறை அதிர்வுகள் நம்மை சுற்றிக் கொண்டிருந்தால் நமது எண்ணமும், செயலும் நேர்மறையாக இருக்காது.

எனவே நமது வீட்டிலும், நம்மைச் சுற்றியும் எப்பொழுதும் நேர்மறை அதிர்வுகள் சூழ்ந்திருக்க நாம் செய்ய வேண்டிய ஒரு சின்ன விஷயம் இதுதான். இந்த மங்களகரமான ஒரு பொருளை நமது வீட்டு உப்பு ஜாடியில் வைத்திட வேண்டும். உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனுடன் மங்கள பொருளான மஞ்சளை வைக்கும்பொழுது வீடு முழுவதுமே சுபிட்சம் அடைகிறது. இதனால் உங்கள் வீட்டில் நேர்மறை அதிர்வுகள் சூழ ஆரம்பிக்கும். எனவே உங்கள் எண்ணமும், செயலும் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும். இதனால் பணம் வீண் விரயம் ஆகாது. பணத்தட்டுப்பாடு என்பதே உங்கள் வீட்டில் இருக்காது.

- Advertisement -