வருமானம் இரட்டிப்பாக பரிகாரம்

mahalakshmi sembaruthi
- Advertisement -

வருமானம், செல்வம், வரவு, சம்பளம், லாபம் என வார்த்தைகள் பலவாக இருந்தாலும் அதற்கான பொருள் என்னவோ பணம் தான். இந்த பணத்தை சம்பாதிக்க தான் இன்று பலரும் பல வகையில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் வருமானத்தை அதாவது பணத்தை இரட்டிப்பாக அதிகரிக்க செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

நம்முடைய வாழ்க்கை நல்ல முறையில் தொடர வேண்டுமெனில் பணத்தின் தேவை மிக மிக முக்கியம். அது இருந்தால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதியுடன் இருக்க முடியும். இன்றைய பல குடும்பங்களின் பிரச்சனைக்கு காரணமே பணம் தான். அதாவது வருமானம் பற்றாக்குறை தான். வரவுக்கு மீறிய செலவு இருக்கும் போது நிச்சயம் நம் கடன் வாங்கி வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவோம்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கியே குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் கடன் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதன் பிறகு அந்த கடனை அடைக்கவும் வட்டி கட்டவும் மீதம் இருக்கும் நாட்களில் ஓடி உழைக்க வேண்டியது இருக்கும். இப்படியான ஒரு வாழ்க்கை நிலை மாறி வருமானம் அதிகரித்து நம்முடைய குடும்பம் நல்ல முறையில் நடக்க ஒரு அருமையான பரிகார முறை தான் இது.

வருமானம் இரட்டிப்பாக பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான முக்கியமான பொருள் செம்பருத்திப் பூ. அதுவும் ஒற்றை இதழ் செம்பருத்தி தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். அடுத்து ஒரு காப்பர் சொம்பு. இவை இரண்டையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி பூவானது நமக்கு மொட்டாக தான் தேவை படும். நாளை இந்த பரிகாரத்தை தொடங்க போகிறீர்கள் என்றால் இன்று மாலையில் செம்பருத்திப் பூவை மொட்டாக பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு உணவு வேலை முடிந்த பிறகு இந்த காப்பர் சொம்பில் சுத்தமான எச்சில் படாத தண்ணீரை பிடித்து பூஜையறையில் வைத்து விடுங்கள். அதில் நீங்கள் பறித்து வைத்திருக்கும் செம்பருத்தி மொட்டை போட்டு சிறிய தட்டை போட்டு அந்த தண்ணீரை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி விட்டு உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அத்துடன் மகாலட்சுமி தாயாரையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த தண்ணீரில் உள்ள செம்பருத்திப் பூவை எடுத்து தண்ணீர் இல்லாமல் உதறிய பிறகு இஷ்ட தெய்வ படம் இருந்தால் அந்தப் படத்திற்கு வையுங்கள். அது இல்லையென்றால் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு இந்த பூவை வைத்து விடுங்கள். அதன் பிறகு பூ போட்டு வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். இதை நீங்கள் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். இந்த தண்ணீரை குடித்த பிறகு தான் எதுவாக இருந்தாலும் உண்ண வேண்டும்.

- Advertisement -

இப்படியாக தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வரும் போது உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்பு நிச்சயமாக வரும் என்று சொல்லப்படுகிறது. அது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாக இருந்தாலும் சரி, சொந்தமாக தொழில் புரிவதாக இருந்தாலும் சரி எந்த வகையில் உங்களுக்கு வருமானம் வருகிறதோ அது நிச்சயம் இரட்டிப்பாகும்.

இதையும் படிக்கலாமே: எதிரியை வசியம் செய்ய ஒரு வரி மந்திரம்

பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது அவர்களுக்கான மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் அப்படியே தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் போது இதற்கான மாற்றத்தை நீங்கள் உணர முடியும். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.

- Advertisement -