வாஸ்து தோஷத்திற்கு பயந்து இனி எதையும் தேடி ஓட வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே இந்த மந்திரத்தை ஜெபித்தால் போதும். எப்பேர்பட்ட வாஸ்து தோஷமும் உங்களை விட்டு பயந்து ஓடி விடும்.

amman vasthu
- Advertisement -

இப்போது எல்லாம் வீட்டில் என்ன பிரச்சனை வந்தாலும் முதலில் தோன்றுவது வீட்டில் அமைப்பு சரியில்லாமல் இருக்குமா? என்பது தான். இதற்கு காரணம் இந்த வாஸ்து பிரச்சனை இன்றைய காலக்கட்டத்தில் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது என்பது தான். வாஸ்து தோஷமே இருந்தாலும் அதற்காக நாம் பெரிய அளவில் எந்த ஒரு செலவும் செய்யாமல் மிக மிக எளிமையாக, அதுவும் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இந்த மந்திரத்தை ஜெபித்தால் போதும் என்று ஆன்மீகத்தில் ஆணித்தரமாக நம்பப்படுகிறது. அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் தான் வாஸ்து பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது முன்பெல்லாம் இல்லையா? என்று கேள்வியும் தோன்றலாம். முன் காலத்தில் எல்லாம் இப்போது இருப்பதைப் போல் இவ்வளவு பிரச்சனைகளை மனிதன் எதிர்கொள்ளவில்லை. தினமும் தன்னுடைய வேலைகளை செய்வது, தான தர்மங்களை செய்து, தன் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வந்தார்கள்.

- Advertisement -

இன்றைய காலகத்தில் மனிதர்கள் அப்படி இல்லை. எங்கு பார்த்தாலும் பிரச்சனை, எதை தொட்டாலும் பிரச்சனை என்று ஆகி விட்டது. அதற்கு என்ன தீர்வு என்று மனிதன் தினம் தினம் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். அதன் காரணமாக முதலில் தோன்றுவது வீட்டில் வாஸ்து தோஷம் இருக்குமா என்ற ஐயப்பாடு தான். இனி உங்களுக்கு அப்படி தோன்றினால் எந்த ஒரு அச்சமும் கொள்ளாமல் இந்த மூன்று வரி மந்திரத்தை ஜெபித்தால் போதும்.

வாஸ்து தோஷத்தை போக்கும் மந்திரம்:
இந்த மந்திரத்தை நீங்கள் வீடு, கடை, தொழில் ஸ்தாபனம், என எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். உங்களுக்கு எந்த இடத்தில் வாஸ்து தோஷம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அல்லது இருக்கிறது என்று சொல்கிறார்களோ அங்கே இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

- Advertisement -

வாஸ்து காயத்ரி மந்திரம்:
ஓம் அனுக்கிரக ரூபாய் வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்தோ வாஸ்து புருஷப்ரசோதயாத்

என்ற இந்த மூன்று வரி மந்திரத்தை முதல் நாள் தொடங்கும் போது மட்டும் காலையில் 108 முறை அமர்ந்தப்படி ஜெபித்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த மந்திரத்தை 27 முறை சொன்னால் போதும். இதை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை நாம் சொல்ல சொல்ல நம்மை சுற்றி உள்ள வாஸ்துவின் காந்த அலைகளும் இந்த மந்திரத்திற்கான சக்தி அலைகளும் ஒன்றாக இணைந்து அந்த இடத்தில் சூழ்ந்து இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரியாகும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீராத நோயினால் தினம் தினம் துன்பப்படுபவர்கள் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். மரண வாயில் வரை சென்றவரை கூட நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த திரு மந்திரம்.

வாஸ்து பிரச்சனையை சரி செய்வதற்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்வதை காட்டிலும், இப்படி எளிமையான முறையில் கடவுளின் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் அந்த இடத்தில் வாஸ்து பிரச்சனை முழுவதுமாக நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாஸ்து பிரச்சனை உள்ளவர்கள் நம்பிக்கை இருந்தால் இந்த மந்திரத்தை நீங்களும் ஜெபித்து பயனடையலாம்.

- Advertisement -