வாழ்க்கையை சீர் செய்யும் சீரகத் தண்ணீர் பரிகாரம்

kalasam
- Advertisement -

இந்த பூமியில் மனிதர்களாக பிறந்திருக்கும் ஒவ்வொருவரும், தினம் தினம் வாழ்க்கையில் புதுசு புதுசாக பிரச்சனைகளை கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் சிக்கி இருக்கிறார்கள். இன்று இருப்பது போலவே வாழ்க்கையானுது என்றைக்குமே சுமூகமாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. இன்று பிரச்சனை இல்லாமல் உங்கள் வாழ்க்கை நகர்ந்து செல்லலாம்.

ஆனால், நாளை பிரச்சினை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இன்று உங்களுடைய வாழ்க்கையில் நிறைய சோதனைகள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் நாளை நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கும். இதுபோல வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். உங்களுடைய வாழ்க்கை இப்படி ஏற்ற இறக்கங்களோடு இருந்தாலும் அந்த வாழ்க்கையை சீர்படுத்தி செம்மையாக வாழ வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு வழியை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வாழ்க்கையை சீர் செய்யக்கூடிய சீரக பரிகாரம்

வாழ்க்கையில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் சரி, உங்களுடைய மனது அதை ஏற்றுக் கொண்டு, வரக்கூடிய பிரச்சினைகளை சரி செய்து சீர்படுத்தி, உங்களுக்கு சந்தோஷத்தை மட்டும் கொடுக்கக்கூடிய பரிகாரம் இது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உங்களுடைய தலைக்கு மேல் பக்கத்தில் ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் சீரகம் போட்டு வைக்க வேண்டும். காலையில் எழுந்து பார்க்கும் போது அந்த சீரகத்தின் தன்மை தண்ணீரில் இறங்கி இருக்கும் தண்ணீரின் நிறம் கொஞ்சம் மாறியிருக்கும் அந்த தண்ணீர் சீரக வாசத்தோடு இருக்கும்.

காலையில் எழுந்து இந்த சீரகத் தண்ணீரை கொஞ்சமாக குளிக்கின்ற தண்ணீரோடு கலந்து குளித்து விடுங்கள். கரடு முரடாக இருக்கும் உங்கள் வாழ்க்கையை சீர் செய்ய இந்த சீரக தண்ணீர் குளியல் நல்லதொரு பலனை கொடுக்கும். இதோடு சேர்த்து இந்த சீரகத் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.

- Advertisement -

அந்த சொம்பில் இருக்கும் ஒரு பாதி சீரக தண்ணீரை எடுத்து குளிக்கும் தண்ணீரோடு சேர்த்து குளிப்பீங்க.  குளித்து முடித்த பிறகு, மீதி பாதி இருக்கும் சீரகத் தண்ணீரை எடுத்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். தொடர்ந்து 27 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் ஏற்ற இறக்கங்களோடு இருந்து வந்தாலும் சரி அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.

வீட்டில் வாஸ்து தோஷத்தால் சிக்கல்கள் இருந்தாலும் அந்த சிக்கல்களை சரி செய்யவும் இந்த சீரக தண்ணீர் பரிகாரம் நிச்சயம உங்களுக்கு கை கொடுக்கும். தினமும் அந்த சொம்பில் புதுசாக தண்ணீர் ஊற்றி, புதுசாக சீரகம் போட்டு, இரவில் தலைக்கு மேல் பக்கத்தில் வச்சுக்கணும் மறக்காதீங்க.

- Advertisement -

சீரகத்திற்கு நம்முடைய அகத்தை சீர் செய்யக்கூடிய சக்தி இருக்கிறது. அகம் என்றால் வயிறு. சீரக தண்ணீர் குடித்தால் நம் வயிற்றில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் ஜீரணக் கோளாறுகளை எல்லாம் சீர் செய்யும் இது சீரகத்துக்கு இருக்கும் மருத்துவ குணம். அதேபோலத்தான் நம்முடைய புறத்தை சுத்தம் செய்யக்கூடிய வேலையையும் இந்த சீரகம் செய்கின்றது.

இதையும் படிக்கலாமே: பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க, பெற்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

இது சீரகத்துக்கு இருக்கும் மகத்துவ குணம். வாழ்க்கையில் தீராத துன்பங்கள் உங்களை துரத்தி வந்தாலும் அதற்கு ஒரு முடிவு கட்ட இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -