5 விரலி மஞ்சள் வீட்டில் இருந்தால், வீண் விரைய செலவுகளை சுலபமாக குறைக்கலாம். தண்ணீராக பணம் கரையுது என்று கஷ்டப்படுபவர்கள் இதை செய்து பாருங்கள்.

virali-manjal-cash
- Advertisement -

சில பேருக்கு பணம் தண்ணீராக செலவு ஆகும். வீட்டிற்குள் வருமானம் வந்தது போல தான் தெரியும். ஆனால், வந்த பணத்தை எங்கே வைத்தோம் எப்படி செலவு செய்தோம் என்றே தெரியாது. அவ்வளவு செலவு. கையில் சேமிப்பு பத்து ரூபாய் கூட நிக்காது. இப்படி வீண் விரைய செலவுகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உங்களுக்கு இருக்கக்கூடிய ஜாதகரீதியான பிரச்சனைகள் கூட இப்படி கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும். அதை சரி செய்யவில்லை என்றால் வருமானம் வந்தும், உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போகும்.

வருமானமே இல்லாமல் பணத்திற்காக கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம் இருக்க, வருமானம் வந்தும் பண கஷ்டம் இருந்தால் என்ன தான் செய்வது. இதுதான் நம்முடைய தலையெழுத்தோ. சரி, இந்த தலையெழுத்தை சரி செய்ய ஆன்மீகம் ஒரு எளிமையான பரிகாரத்தை சொல்லி இருக்கிறது. அது என்ன என்பதை தெரிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வீண் விரைய செலவுகள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

- Advertisement -

வீண் செலவைக் குறைக்க பரிகாரம்:
நீங்கள் படுத்து தூங்க கூடிய இடம் சரியில்லை என்றால் கூட உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும். குரு பகவானால் ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு தாங்காது. இதை சரி செய்ய ஐந்து விரலி மஞ்சள் எடுத்துக்கோங்க. ஒரு மஞ்சள் நிற சதுர வடிவில் இருக்கும் துணியில் இந்த ஐந்து விரலி மஞ்சளையும் வைத்து முடிச்சாக கட்டி படுக்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

தொடர்ந்து இந்த முடிச்சை தலையணைக்கு ஆடியில் வைத்து தூங்குவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீண் செலவுகள் குறையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணம் சேமிப்பில் தங்கும்.

- Advertisement -

மறுநாள் காலை எந்திரிக்கும் போது, அந்த மஞ்சள் முடிச்சை தலையணைக்கு அடியில் இருந்து எடுத்து, ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். மீண்டும் இரவு தூங்க செல்லும் போது அந்த மஞ்சளை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டால் போதுமானது. 11 நாட்கள் இந்த முடிச்சு அப்படியே இருக்கட்டும். 11வது நாள் கழித்து அந்த மஞ்சளை செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: எந்த பூஜை பரிகாரம் செய்தாலும் நம் கஷ்டம் தீரவில்லையே என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று இப்படி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.

அந்த துணியை துவைத்து விட்டு, காய வைத்து விட்டு, மீண்டும் அதில் புதுசாக ஐந்து மஞ்சள் வைத்து பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். இதே போல எத்தனை நாட்கள் செய்வது. உங்களுக்கு வீண் விரைய செலவு குறையும் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். சின்ன சின்னதாக இருக்கும் விரலி மஞ்சள் பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் கூட போதும். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர இந்த எளிமையான பரிகாரம் நிச்சயமாக கை கொடுக்கும். முதல் 11 நாட்கள் பரிகாரத்தை செய்யும் போதே வரக்கூடிய நல்ல மாற்றம், இந்த ஆன்மீகம் பரிகாரத்தின் மீது உங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும்.

- Advertisement -