சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருக வெற்றிலையில் இதை தடவி வைத்து பாருங்கள். கையில் இருக்கும் பணம் வீண் விரயமாகாமல் பல மடங்காக பெருகி கொண்டே இருக்கும்.

- Advertisement -

நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் வாங்கிய பணம் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே செலவழிந்து விடுகிறது. சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யாமல் இருக்க முடியாது தான். ஆனால் வரவுக்கு மீறி செலவு அதிகரித்துக் கொண்டே இருந்தால் நிலைமை கை மீறி தான் போகும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். ஒரு சிலருக்கு பணம் கையில் தங்குவதற்கான யோகம் இருக்காது. கையில் பணம் தங்குவதோடு வீண்விரயமும் ஆகாமல் இருக்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு சுத்தமான பசு நெய், ஐந்து வெற்றிலை, இந்த வெற்றிலை நல்ல வெற்றிலையாக இருக்க வேண்டும். வெற்றிலை கருத்தோ அல்லது வெற்றிலை கிழிந்து இல்லாமல் நல்ல வெற்றிலையாக எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் பச்சை கற்பூரம் இவற்றையெல்லாம் சேர்த்து முடிச்சாக கட்ட மஞ்சள் நிற பட்டு துணி தேவை. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த நாள் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் பணம் கையில் தங்கவும், பெருகவும் வேண்டுமானால் அவர்களின் ஆசீர்வாதம் நிச்சயம் நமக்கு தேவை. ஆகையால் வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை தொடங்கும் போது இதற்கான பலன் பன்மடங்காக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் நீங்கள் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு அன்றைய தின பூஜை வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, வாங்கி வைத்துள்ள பொருட்களை எல்லாம் பூஜை அறையில் வைத்து உங்கள் குல தெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி தாயாரை வணங்கி உங்களின் இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் பணம் கையில் தங்கி பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வெற்றிலை மீது பசு நெய் லேசாக தடவி விடுங்கள். அதன் மேல் கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து ஐந்து வெற்றிலையும் ஒன்றாக வைத்து ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து கட்டி விடுங்கள். அதன் பிறகு இந்த வெற்றிலை முடிச்சுயை மஞ்சள் நிற பட்டுத் துணியில் வைத்து அதையும் ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டிய பிறகு இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். தொழில் செய்பவராக இருந்தால் கல்லாப் பெட்டியில் வைக்கலாம்.

பணம் கைக்கு வந்ததும் அதை முதலில் இந்த முடிச்சு இருக்கும் இடத்தில் வைத்து இந்த பணம் வீண்விரையம் ஆகாமல் எனக்கு பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டு சிறிது நேரம் பணத்தை அதிலேயே வைத்து விடுங்கள். எந்த காரணத்திற்கு கொண்டும் அதில் வைக்காமல் பணத்தை செலவு செய்யாதீர்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கு வீண் விரயம் ஆகிக்கொண்டிருக்கும் செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்களே உணர்வீர்கள். இத்துடன் இதில் இருக்கும் வெற்றிலை, நெய், பச்சை கற்பூரம், அனைத்துமே பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டவை. அதுமட்டுமின்றி அனைத்தும் மகாலட்சுமி தாயாரின் அருள் பெற்றவை. இந்த முடிச்சை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள். வியாழக்கிழமை இந்த முடிச்சை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது தண்ணீரிலோ போட்டு விடுங்கள். வெள்ளிக்கிழமை மறுபடியும் இதே போல் புதிதாக செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நம்பிக்கை தோற்கும் பொழுது தும்பிக்கை நாயகனின் சக்தி வாய்ந்த இந்த 1 மந்திரத்தை மட்டும் உச்சரித்துப் பாருங்கள், உங்களை வெல்ல எவராலும் முடியாது!

நீங்கள் சம்பாதிக்கும் பணம் பல மடங்காக பெருகி வீண் விரயம் ஆகாமல் காத்துக் கொள்ள இந்த பரிகாரம் பெரிதும் உதவியாக இருக்கும். வீண் விரயம் இல்லாமல் இருந்தாலே கையில் பணம் தங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வெற்றிலை பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -