வரவேற்பறையில் இந்த 1 பொருளை வைத்து விட்டால், வீட்டில் கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையும் சாந்தமாய் அடங்கும்.

home-hall-astro
- Advertisement -

சந்தோஷமாக இருக்கும் வீட்டில் திடீர் என்று பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கும். வீட்டில் இருந்த நிம்மதி அமைதி எல்லாம் கண்காணாத தூரத்திற்கு சென்று விடும். எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவு, வீட்டில் இருந்தாலே நிம்மதி இல்லை, வீட்டை விட்டு எங்கேயாவது சந்நியாசம் ஓடி விடலாமா என்று கூட தோன்றும். அடுத்தடுத்த பிரலயங்கள் வெடிக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் எதனால் வருகிறது? கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கண் திருஷ்டி உங்கள் குடும்பத்தின் மீது விழுந்திருக்கிறது. நீங்கள் சந்தோஷமாக இருப்பதை, பொறாமை குணம் கொண்டவர்கள் யாரோ பார்த்து வயிற்றெரிச்சல் பட்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த பிரச்சனை.

சந்தோஷம் நிலைகுலைவதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணம். கூடவே கண் திருஷ்டியை தவிர்த்து உங்களுடைய கெட்ட நேரம் ஒரு காரணமாக இருக்கலாம். ஜாதகத்தில் பிரச்சனையாக இருக்கலாம், அல்லது உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் ஏதாவது கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் சேட்டையாக கூட இருக்கலாம். இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆன்மிகம் சார்ந்த தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வீட்டில் நிம்மதி நிலவ தண்ணீர் பரிகாரம்:
ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளர் முழுவதும் தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் வரமிளகாயின் விதை 7, கடுகு 1 ஸ்பூன், கல் உப்பு 1 ஸ்பூன், போட்டு கலந்து வரவேற்பறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். பரிகாரம் இவ்வளவுதான். உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி அத்தனையையும் ஒரு சில மணி நேரத்தில் இந்த தண்ணீர் இழுத்துக் கொள்ளும்.

தினமும் இந்த தண்ணீரை எடுத்து வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் கொட்டி விட்டு மீண்டும் டம்ளரை கழுவி புதிய தண்ணீரை நிரப்பி அதே போல வரமிளகாய் விதை, கடுகு, கல்லுப்பு போட்டு வரவேற்பரையில் வைத்து விடுங்கள். ரொம்பவும் பிரச்சனையாக உங்க வீட்டில் இருக்குது என்றால் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்யுங்கள். 11 நாட்களில் வீட்டில் பரிகாரத்தை செய்யும் போது இடைவெளி விட வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தாலும் பரவாயில்லை இந்த டம்ளர் தண்ணீரை தயார் செய்து வைக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

11 நாட்கள் இப்படி செய்யும் போதே உங்கள் வீட்டில் வரக்கூடிய மாற்றத்தை உங்களால் உணர முடியும். வீட்டில் இருந்த சந்தோஷம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பவும் வரும். மன நிம்மதி கிடைக்கும். பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். நமக்கே தெரியும் அல்லவா. வீட்டில் சூழ்நிலை மாறுவது. அதை உணர்ந்தவுடன் நீங்கள் பரிகாரம் செய்வதை நிறுத்தி விடலாம்.

இதையும் படிக்கலாமே: மாரியம்மன் கோவிலுக்கு போய் இந்த 1 பொருளை தானம் செய்யுங்கள். தீராத மன குழப்பம் தீரும். சிக்கலான பிரச்சனையில் இருந்து உடனே விடுபடுவீர்கள்.

ஆனால் வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் 2 முறையோ இந்த டம்ளர் தண்ணீரை உங்களுடைய வீட்டில் வைத்து எடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நெகட்டிவ் எனர்ஜியை ஒருமுறை விரட்டி விட்டால், கண் திருஷ்டியை ஒரு முறை விரட்டி விட்டால் திரும்பவும் வராது என்று ஆணித்தனமாக சொல்ல முடியாது. கண் திருஷ்டியும் எதிர்மறை சக்தியும் நாம் சாகும் வரை நம்மை துரத்தும். அதை விரட்டி அடிக்க ஏதாவது ஒரு வகையில் சின்ன சின்ன திருஷ்டி கழிக்கும் பரிகாரத்தை நாம் செய்து கொண்டே தான் இருக்க வேண்டும். அந்த வரிசையில் நிறைய பரிகாரங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு எளிமையான பரிகாரம். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்தி பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -