நல்ல வேலை கிடைக்க பிள்ளையார் மந்திரம்

pillaiyar3
- Advertisement -

கை நிறைய சம்பளத்தோடு மனசுக்குப் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று விடாமல் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு ரொம்ப ரொம்ப பயனுள்ளபடி அமையும். காரணம் இந்த மந்திரத்தை சொல்ல தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே நிறைய பேர், நல்ல வேலையில் அமர்ந்து பயன் பெற்றுள்ளார்கள்.

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிலும் நாளை சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி. புதிய வேலை கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, வேலையில் இருக்கும் பிரச்சினைகள் சரியாக, அரசாங்க வேலை கிடைக்க இப்படி வேலை சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

தடைகளை உடைப்பதில் வல்லவர் விநாயகர். அதிலும் நல்ல வேலை கிடைப்பதில் தடையா, கையில் வருமானமே இல்லையா, சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா, உடனடியா நாளைக்கு பிள்ளையார் கோவிலுக்கு போய் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி விடுங்கள். உங்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைப்பது உறுதி. அது என்ன மந்திரம், அந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது. இந்த மந்திரத்தை உச்சரித்து தினமும் விநாயகரை எப்படி வேண்டுவது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

நல்ல வேலை கிடைக்க விநாயகர் மந்திரம்

நாளைய தினம் 30-12-2023 சங்கடஹர சதுர்த்தி. காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள். காலையிலேயே பிள்ளையார் கோவிலுக்கு போங்க. பிள்ளையாருக்கு உங்களால் முடிந்த பொருளை வாங்கி கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, கோவிலை மூன்று முறை வளம் வாங்க. கோவிலுக்கு முன்பாக அமர்ந்து கொள்ளுங்கள். பின் சொல்லக்கூடிய பிள்ளையார் மந்திரத்தை 108 முறை உச்சரித்து இந்த வழிபாட்டை தொடங்குங்கள்.

- Advertisement -

விநாயகர் மந்திரம்

ஓம் கம் கௌம் கணபதயே
விக்ன விநாஷினே ஸ்வாஹா

108 முறை இந்த மந்திரத்தை சொல்ல கணக்கு வைத்துக்கொள்ளனும். வீட்டிலிருந்து செல்லும்போதே மஞ்சள், மொச்சைக்கொட்டை அல்லது பொட்டுக்கடலை மல்லிகை பூ, ஏதாவது ஒன்றை நூற்றி எட்டு என்ற கணத்தில் எடுத்துச் சென்று பிள்ளையார் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்கள் வீட்டின் அருகில் எந்த பிள்ளையார் கோவில் இருந்தாலும் இந்த வழிபாட்டை தொடங்கி விடுங்கள்.

- Advertisement -

அடுத்தடுத்த நாளிலிருந்து தொடர்ந்து 48 நாட்களும் நீங்கள் இந்த மந்திரத்தை விடாமல் சொல்ல வேண்டும். வீட்டிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகரையும் குலதெய்வத்தையும் நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க. இந்த மந்திரத்தை சொல்ல தொடங்கி 21 நாட்களிலேயே உங்களுக்கு சூப்பரான வேலை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருப்பினும் இடையிலேயே வேலை கிடைத்துவிட்டாலும் இந்த வழிபாட்டை நிறுத்தக்கூடாது.

வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அகல தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிள்ளையார் கோவிலில் சென்று வழிபாட்டை தொடங்கும் போது விநாயகா இந்த வழிபாட்டை செய்ய எனக்கு எந்த தடைகளும் வரக்கூடாது என்று அவரிடம் பிரார்த்தனை வையுங்கள். தடையில்லாமல் இந்த வழிபாட்டை முடிக்க அந்த விநாயகர் நல்ல வழியை காட்டிக் கொடுப்பார்.

இதையும் படிக்கலாமே: திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வழிபாடு

பெண்களாக இருந்தால் இயற்கையாக 5 நாள் தடைவரும். கவலை படாதீங்க அந்த ஐந்து நாளை தவிர்த்துவிட்டு 48 நாளை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். நல்லவேளை கிடைக்க விநாயகரின் பாதங்களை பற்றி கொள்ளுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -