ஓடி ஓடி தேடியும் கிடைக்காத வேலை தானாக உங்களைத் தேடி வரும். கை நிறைய சம்பள பணத்தை வாங்க, இந்த பொருளை மட்டும் உங்கள் கையால் தானம் கொடுத்து விடுங்கள்.

job
- Advertisement -

தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவம், இன்று வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றேன். வீட்டின் வாடகை கொடுப்பதற்கு கூட வழியில்லை. ஒரு அரிசி மூட்டை கூட காசு கொடுத்து வாங்க முடியவில்லை. அவ்வளவு கஷ்டம். ஆனால், ஒரு நல்ல வேலை கிடைக்காமல், தினக்கூலிக்கு கூட வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கஷ்டம் வருவதற்கு ஏதோ ஒரு கர்ம வினை தான் காரணமாக இருக்கும். அந்த கர்ம வினையை தீர்ப்பதற்கு இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

எனக்கு வீட்டில் எந்த பிரச்சனையும் கிடையாது. மூன்று வேலை சாப்பாடு கிடைக்கிறது. வீட்டில் அப்பா அண்ணன் என்று எல்லோரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் சொந்த உழைப்பில் முயற்சி செய்து எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க செய்ய வேண்டிய தானம்:
இந்த பரிகாரத்தை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எத்தனையோ தானங்களை நம் கையால் வாங்கி செய்திருப்போம். அன்னதானம் கூட செய்திருப்போம். ஆனால், இந்த தானத்தை செய்திருக்க மாட்டோம். அப்படி என்ன ஒரு பெரிய தானம். இந்த தானத்தை கொடுத்தால் வேலை கிடைத்து விடுமா. நிச்சயம் கிடைக்குங்க.

21 தேங்காய் வாங்கி தானம் கொள்ளுங்கள். மட்டை தேங்காய் கிடையாது. சாதாரண தேங்காய் தான். 21 தேங்காய்களை வாங்கி உங்கள் கையால் அடுத்தவர்களுக்கு நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். கோவில் வாசலில் இருப்பவர்கள் அல்லது கஷ்டப்படுபவர்கள் என்று யாருக்காவது இந்த 21 தேங்காயை உங்கள் கைகளால் தானம் கொடுங்கள். மொத்தமாக வாங்கி ஒரு இடத்தில் கொடுத்து விடக்கூடாது. ஒவ்வொரு தேங்காயாக 21 நபருக்கு, தேங்காய் தானம் கொடுத்தால், 21 தலைமுறை பாவமும் கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. (ஒரு தேங்காயை ஒருவருக்கு என்ற வீதம், 21 பேருக்கு 21 தேங்காய்.)

- Advertisement -

கொஞ்சம் தயங்காமல் சிரமப்பட்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்காக ஆக கூடிய செலவு கூட மிகவும் குறைவுதான். ஒவ்வொரு தேங்காய் தானம் கொடுக்கும் போதும், ஒவ்வொரு தலைமுறைபாவமும் கழிந்து கொண்டே வரும். பிறகு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக தீரும். குறிப்பாக வருமானத்திற்கு தடை போடும் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். அது அரசாங்க உத்தியோகமாக இருந்தால் கூட உங்கள் வீடு தேடி வரும்.

நல்ல காரியமாக இருந்தாலும், கெட்ட காரியமாக இருந்தாலும் அதில் முன்னாடி வந்து நிற்பது இந்த தேங்காய் தான். அப்ப அந்த தேங்காய்க்கு எத்தனை மகத்துவம் என்று நமக்கே புரிந்து இருக்கும். சுவாமிக்கு பூஜை செய்வதாக இருந்தாலும் தேங்காய், திருஷ்டி கழிப்பதாக இருந்தாலும் தேங்காய் தான். வேறு ஏதாவது நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும் தேங்காய் உடைத்து ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

இதையும் படிக்கலாமே: இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது. ஆயுசுக்கும் அன்னோனியமாக குடும்பம் நடத்த அழகான பதிவு.

சங்கடங்கள் தீர வேண்டும் என்றாலும் சிதரு தேங்காய் உடைக்க வேண்டும். இப்படி எல்லா விஷயத்திற்கும் முன் வந்து நிற்கும் இந்த தேங்காய் தானத்தை செய்துதான் பாருங்களேன். உங்களுடைய வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெரலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -