இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும்‌. எப்போதும் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எதிரியை துவம்சம் செய்து விடலாம்.

velleruku
- Advertisement -

எதிரி இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் என்பது நிச்சயமாக இருக்காது. எல்லா விஷயத்திலும் நமக்கு எதிரே, போட்டி போடும் ஒரு எதிரி இருந்தால் தானே அவனை வென்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் பிறக்கும். ஆகவே, எதிரிகளை அழிக்க வேண்டும் என்று என்றைக்குமே நாம் நினைக்கக் கூடாது. எதிரிகளோடு போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது. நேருக்கு நேர் மோதும் எதிரியாக இருந்தால், நாமும் நேருக்கு நேர் மோதி வெற்றியோ தோல்வியோ கிடைப்பதை அனுபவிக்கலாம். ஆனால் சூழ்ச்சி செய்யக்கூடிய எதிரிகளாக இருந்தால், நாமும் சூழ்ச்சி செய்து தான் அந்த எதிரியை வெல்ல முடியும். உங்களுடைய கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்ல சுலபமான ஒரு ஆன்மீகம் சார்ந்த தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

எதிரியை விரட்டும் விளக்கு பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு வெள்ளருக்கன் இலை தேவை. வெள்ளருக்கன் இலை கிடைக்கவில்லை என்றால், வேறு எருக்கன் செடியில் இருந்து கூட இலையை பறித்துக் கொள்ளலாம். ஆனால் வெள்ளருக்க இலைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று எருக்கன் இலைகளை எடுத்து அதிலிருந்து கொஞ்சம் சாறை பிழிந்து எடுக்க வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி உங்கள் கைகளைக் கொண்டு சாறை பிழிந்து எடுத்தாலே அந்த இலையில் இருந்து சாறு கிடைக்கும். அந்த சாறை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை எடுக்கும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். கையை முகத்திலோ வாய் பகுதியிலோ வைக்க வேண்டாம்.

- Advertisement -

விளக்கு ஏற்றுவதற்கு இரண்டு பஞ்சு திரிகளை திரித்து அந்த பஞ்சு திரியை இந்த சாரில் நனைத்து அப்படியே காய வைக்க வேண்டும். மீதம் இருக்கக்கூடிய அந்த சாறை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறை அல்லாமல் வரவேற்பு அறையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம்.

ஒரு சிறிய தாம்பூல தட்டில் ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி அந்த நல்லெண்ணெயில் மீதம் இருக்கும் வெள்ளருக்கன் சாறை கலந்து, தயார் செய்த வெள்ளருக்கன் சாரில் நினைத்த திரியை அந்த விளக்கில் போட்டு, குலதெய்வத்தை மனதில் வேண்டி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். விளக்கு கிழக்கு பார்த்தவாறு எரியட்டும். நீங்கள் விளக்கை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, அந்த தீபச்சுடரை பார்த்து எதிரி பிரச்சனை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

கண்ணுக்குத் தெரிந்த, பெயர் தெரிந்த எதிரியாக இருந்தால் அந்த எதிரியின் பெயரைச் சொல்லி அந்த எதிரியின் மூலம் வரக்கூடிய தொல்லை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் வைக்கலாம்.

பத்து நிமிடங்கள் நீங்கள் அந்த தீபச்சுடரை பார்த்து இப்படியாக வேண்டுதல் வைக்க, கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபட முடியும். இப்படி நீங்கள் எந்த எதிரியை நினைத்து வேண்டிக் கொள்கிறீர்களோ, அந்த எதிரியின் வாழ்க்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அந்த குறிப்பிட்ட எதிரி உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டான் அவ்வளவுதான். எதிரியின் சூழ்ச்சியால் நீங்கள் கீழே விழ மாட்டீர்கள்.

- Advertisement -

சில எதிரிகள் எல்லாம் நம்மை வீழ்த்த வேண்டும் என்பதற்காக கெட்ட சக்திகளை எல்லாம் கூட ஏவி விடுவார்கள். அப்படிப்பட்ட கெட்ட சக்திகள் எல்லாம் கூட உங்களை தாக்காமல் இருக்க இந்த பரிகாரம் துணையாக நிற்கும். மற்றபடி இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் மனித உயிருக்கு ஏற்படாது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை அன்று ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து விட்டால், வாழ்வில் வீழ்ச்சி என்பதே இருக்காது. வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் நிற்க தவமிருக்கும்.

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமென்றாலும் செய்யலாம். நேரம் என்பது உங்களுடைய விருப்பம் தான். காலை அல்லது மாலை நேரத்தில் எப்போதும் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வர எதிரிகளால் வரக்கூடிய சூழ்ச்சியிலிருந்து நாம் தப்பிக்க ஒரு வழியை இந்த பிரபஞ்சம் நமக்கு காட்டித் தரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -