வெள்ளிக்கிழமை பசுமாட்டிற்கு இதை மட்டும் உங்களுடைய கைகளால் கொடுங்கள் போதும். உங்களுடைய வருமானம் உயர்ந்து கொண்டே செல்லும். பணத்திற்கு ஒரு நாளும் வீட்டில் பஞ்சமே வராது.

cow
- Advertisement -

நம்முடைய குடும்பத்திற்கு பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாது. பணம் கைகளில் சரளமாக புரள வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும். நிரந்தரமாக நமக்கு வருமானம் தரக்கூடிய ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அல்லது சொந்தமாக ஒரு தொழிலை செய்து வரவேண்டும். அதன் மூலம் நமக்கு வருமானம் நிரந்தரமாக வரத் தொடங்கும். இதை செய்தாலே நம்முடைய குடும்பம் சீரும் சிறப்புமாக லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். வருமானத்தை பெருக்கிக்கொள்ள நாம் செய்யக்கூடிய தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும். தொழிலில் சிறக்க நாம் செய்யக்கூடிய வேலையில் வருமானம் அதிகரிக்க என்ன பரிகாரம் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எல்லோருக்கும் தெரியும் பசுமாடு மகாலட்சுமி அம்சம் கொண்ட ஒரு உயிரினம். கோமாதாவை உண்மையான பக்தியோடு தினம் தோறும் வீட்டில் வழிபாடு செய்து வந்தாலே, வீட்டில் இருக்கும் தரித்திரம் விரட்டி அடிக்கப்படும். வெள்ளிக்கிழமை அன்று கோமாவிற்கு உங்களுடைய கைகளால் இதை மட்டும் கொடுத்து வாருங்கள். உங்களுடைய வருமானத்தில் நிச்சயமாக நல்ல முன்னேற்றத்துடன் கூறிய மாற்றம் தெரியும்.

- Advertisement -

உங்களுடைய கைகளால் கோதுமை மாவை பிசைந்து, அதை வட்ட வடிவில் தட்டி, சப்பாதியாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சப்பாத்தியோடு வெல்லம், நாட்டுச் சர்க்கரை, அல்லது தேன் ஏதாவது ஒரு பொருளை கலந்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். குறிப்பாக இதை யார் கையால் பசு மாட்டிற்கு கொடுப்பது.

honey 3

குடும்பத்தில் யார் வருமானம் ஈட்டி தருகிறார்களோ அவர்களுடைய கையால் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. சிலபேர் வீடுகளில் அப்பா மட்டும் வேலை செய்வார். அப்படி இருக்கும்போது அந்த அப்பாவின் கைகளால் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சில பேர் வீடுகளில் அம்மாவும் சேர்ந்து வேலை செய்வார்கள். அப்போது அம்மா அப்பா இருவரும் சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

யார் யாருக்கெல்லாம் வருமானம் அதிகரிக்க வேண்டுமோ அவர்களுடைய கையால் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயமாக அவர்களுடைய கையில் சரளமாக பணம் புரள தொடங்கிவிடும். பண தட்டுப்பாடு ஏற்படாது. இத்தனை வாரங்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பரிகாரத்தை செய்தாலும் கூட தவறு இல்லை. உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய தடைகள் அனைத்தும் இந்த பரிகாரம் செய்வதன் மூலம் தகற்க்கப்படும். வெள்ளிக்கிழமை அன்றுதான் குறிப்பாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Chapathi maavu

வெள்ளிக்கிழமை இந்த சப்பாத்தியை பசுமாட்டிற்கு கொடுத்துவிடுங்கள். அதன் பின்பு வாரம் வரக்கூடிய புதன்கிழமைகளில் புளிச்ச கீரையை பசு மாட்டிற்கு வாங்கிக் கொடுப்பதும் சிறப்பான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வாழ்க்கையில் தீராத கடன் சுமை, வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத உடல்நல பிரச்சனை, மன கஷ்டம், மனக்குழப்பம் எது இருந்தாலும் அதை சரிசெய்ய புதன்கிழமை இந்த புளிச்ச கீரையை பசு மாட்டிற்கு வாங்கிக் கொடுக்கலாம்.

Pasu

புதன் கிழமை வெள்ளிக்கிழமை இரண்டு தினங்களிலும் தொடர்ந்து இந்த இரண்டு பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழ்வதை கண்கூடாக காணமுடியும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -