தினமும் காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும். வீட்டில் அஷ்ட லட்சுமி ஐஸ்வர்யமும் தாண்டவம் ஆடும்.

vilakku1
- Advertisement -

பெரிய பெரிய வசதி வாய்ப்பு கொண்டவர்கள் வீட்டில் நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால், இது உங்களுக்கு நன்றாக புரியும். விஷயம் தெரிந்தவர்கள் அவர்களது வீட்டு பூஜை அறையில் நிறைய வெள்ளிப் பொருட்களை வைத்திருப்பார்கள். வெள்ளி சிலைகள், வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி குத்துவிளக்கு, வெளியில் தூபக்கால், பூஜை மணி, என்று பூஜை அறையை வெள்ளியிலாளியை அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா. வெள்ளி என்பது சுக்கிரனுக்கு உகந்த ஒரு உலோகம்.

இந்த வெள்ளியை பூஜை அறையில் வைத்தால் சுக்கிரனின் அனுகிரகமும் மகாலட்சுமியின் அனுகிரகமும் சேர்ந்து நமக்கு கிடைக்கும். அதற்காக நாம் எல்லோர் வீட்டிலும் வெளியே வாங்கி குவிக்க முடியாது. ஆனால், எல்லோராலும் வெள்ளியில் காமாட்சியம்மன் விளக்கு வாங்க முடியும். கஜலட்சுமி விளக்கு வாங்க முடியும். அந்த அளவுக்கு நமக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய வீட்டு பூஜை அறையிலும் வெள்ளியில் ஒரு விளக்கு வாங்கி வைக்க வேண்டும். அதில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி செய்தால் அஷ்டலட்சுமி ஐஸ்வரியமும் உங்களுடைய வீட்டில் தங்கும்.

- Advertisement -

வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் முறை:
இந்த வெள்ளி விளக்கை வீட்டில் எப்படி ஏற்றுவது. வாங்கிய வெள்ளி விளக்கை சுத்தமாக கழுவி விட்டு, சந்தன குங்குமம் போட்டு வைத்து பூஜை அறையில் சின்னதாக ஒரு தட்டின் மேல் வைத்து அதில் பசு நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வீட்டின் அருகில் பசுமாடு வளர்ப்பவர்கள் இருந்தால், அவர்களிடம் சொல்லி வைத்து தரமான பசு நெய் வாங்கி, இந்த வெள்ளி விளக்கில் ஊற்றி, அந்த நெய்யில் சின்ன பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு, தீபம் ஏற்றினால் வீட்டில் எந்த கஷ்டமும் இருக்காது. குறிப்பாக வீட்டில் பணத்திற்கு பிரச்சனை என்பதை வராது.

தினமும் பசுநெய் ஊற்றி ஏற்றுவதற்கு வசதி இல்லை என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது இந்த விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளி விளக்கை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு, வெற்றி மேல் வெற்றியும், வருமானத்திற்கு மேல் வருமானமும் வந்து குவியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

வெள்ளி சுக்கிரன். பசு நெய் மகாலட்சுமி அம்சம். பச்சைக் கற்பூரம் பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருள். இந்த மூன்று பொருட்களின் சேர்க்கை உங்கள் குடும்பத்தை வாழ்வாங்கு வாழ வைக்கும். இதிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் வீட்டில் இருப்பவர்களுக்கு மனநிறைவை கொடுக்கும். சந்தோஷத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: காலையில் நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை சொன்னால் மகாலட்சுமி தாயாரே அஷ்ட தேவதைகளுடன் நம் வீடு தேடி வந்து பொன்னையும் பொருளையும் அள்ளி தருவார்.

வாங்கிய வெள்ளி பொருட்களை எப்போதுமே சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் வெள்ளி பொருட்கள் கருத்து போகாமல் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்கள் கருத்து போனாலும் பணக்கஷ்டம் வரும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெரலாம்.

- Advertisement -