காலையில் நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை சொன்னால் மகாலட்சுமி தாயாரே அஷ்ட தேவதைகளுடன் நம் வீடு தேடி வந்து பொன்னையும் பொருளையும் அள்ளி தருவார்.

lakshmi-door-vasal
- Advertisement -

இன்றைய காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய கஷ்டம், பிரச்சனை என்றால் அது பணத்தை சுற்றியதாகத் தான் இருக்கும். ஒருவரிடம் தேவைக்கு ஏற்ற பணம் இருக்குமானால் அதுவே அவருடைய பிரச்சனைகளை பாதி அளவிற்கு மேல் குறைத்து விடும். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் பாடுபட்டுக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய இல்லங்களில் ஒரு சில முறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆன்மீகம் சொல்கிறது.

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க நாம் எப்போதும் எதையும் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாது என்று சொல்லப்படுகிறது. வீட்டில் ஏதேனும் பொருள் தீர்ந்து விட்டால் கூட அதை வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டுமே தவிர அது இல்லை என்ற வார்த்தையை பயன் படுத்த கூடாது.

- Advertisement -

அதே போல் வீட்டில் காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் விளக்கு ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றும் நேரத்தில் நல்ல வாசனை மிக்க பத்திகளை ஏற்றி வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்கும் படி வைத்தாலே லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும். இப்படி விளக்கு வைத்திருக்கும் நேரத்தில் எந்த ஒரு அபசகுனமான வார்த்தைகளையும், கெட்ட வார்த்தைகளையும் பேசக் கூடாது. மற்ற நேரங்களில் இதை செய்யக் கூடாது தான் ஆனால் விளக்கு வைக்கும் நேரத்தில் மிகவும் கவனமாகவே பேச வேண்டும்.

வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் நாம் பணத்தை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய நாம் வியாழன் அன்றே பூஜையறையை சுத்தம் செய்வது, விளக்குகளை துடைப்பது, படங்களை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைப்பது என அனைத்து வேலைகளும் முடித்து விட வேண்டும். வெள்ளிக்கிழமையில் வீடு துடைப்பது படத்தை துடைப்பது போன்றவற்றை செய்தால் செல்வமும் துடைத்துக் கொண்டு போகும் என்ற ஒரு ஐதீகம் உண்டு.

- Advertisement -

வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் நல்லது. அந்த நேரத்தில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்து அதில் இரண்டு ஏலக்காய் போட்டு வைத்த பிறகு அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அந்த தண்ணீரை பணம் வைக்கும் இடத்திலும் தெளித்து வர லட்சுமி கடாக்ஷம் பெருகி பண வரவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பணம் பெட்டி தேக்கில் வைத்திருப்பது நல்லது தேக்கு என்றாலே தேக்கி வைப்பது என்ற பொருள் எனவே பணம் அதில் எப்போதும் தேங்கி இருக்கும்.

இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்று காலையில் எழுந்தவுடன் நாம் முதலில் கொள்ளை புறம் கதவை தான் திறக்க வேண்டும். கொல்லை புற கதவு இல்லாதவர்கள் முதலில் ஜன்னலை திறந்த பின்பு நிலை வாசல் கதவை திறக்க வேண்டும். அப்படி நிலை வாசல் கதவை திறக்கும் பொழுது ஓம் வரலட்சுமியே நமஹ என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். இதை முடிந்த வரையில் பிரம்ம முகூர்த்த வேளையில் சொன்னால் நாம் அழைக்காமலே மகாலட்சுமி தாயானவர் நம் இல்லம் தேடி வந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்கி நம்மை வாழ வைப்பார்.

இதையும் படிக்கலாமே: துடைப்பம் வாங்க நல்ல நாள் எது தெரியுமா? இந்த நாளில் துடைப்பம் வாங்கினால் அதிர்ஷ்டம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொட்டுமாம்!

இந்த பதிவில் வீட்டில் பணம் தங்கவும் செல்வம் பெருகவும் செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகளை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த முறைகளை எல்லாம் நாம் சரியாக பின்பற்றி இருந்தாலே நம்முடைய பணப்பிரச்சனைகள் பாதி மேல் குறைவதோடு சம்பாதிக்கும் பணமும் பன்மடங்கு பெருகும்.

- Advertisement -