கேட்டது கிடைக்க சஷ்டி தீபம்

murugan dheepam
- Advertisement -

தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானை வணங்குபவர்கள் இன்று பல்லாயிரம் பேர். அத்தகைய முருகப்பெருமானை வணங்குவதற்கு பல சிறப்பு மிக்க நாட்கள் இருந்தாலும், சஷ்டி வழிபாடு என்பது அவருக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் மாதங்களில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டியில் அவரை வழிபட்டால் நாம் கேட்டது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில் இன்று வியாழக்கிழமை மாசி மாத வளர்பிறை சஷ்டி தினமாகும். இன்றைய தினத்தில் உங்கள் வேண்டுதல் நிறைவேற முருகப்பெருமானுக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். உங்கள் வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது ஐதீகம். அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற சஷ்டி தீபம்

பொதுவாகவே சஷ்டி விரதம் என்றால் அது குழந்தை பாக்கியத்திற்கான ஒன்று என்று நினைக்கிறார்கள். அப்படியன்று சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் போது நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும். கேட்டவை அனைத்தும் நிச்சயமாக கிடைக்கும் அது எதுவாக இருந்தாலும் முருகன் அருள்வார். அதுமட்டுமின்றி இந்த சஷ்டி விரதம் இருப்பவர் வீட்டில் 16 வகையான செல்வங்களும் நிலைத்து இருக்கும் என்பதும் ஐதீகம்.

அந்த வகையில் இன்றைய சஷ்டி தினத்தில் மாலை முருகப்பெருமானுக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள். சஷ்டி விரதம் இருப்பவர்கள் இன்று காலை முதல் விரதத்தை தொடங்கி இருப்பீர்கள். பொதுவாக சஷ்டி தீப வழிபாட்டை மாலையில் செய்வது சிறந்தது. அதுவும் இன்று வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாளில் வந்திருக்கிறது. குபேர வழிபாட்டிற்கும் மாலை வேளையே சிறந்தது.

- Advertisement -

ஆகையால் இந்த தீபத்தையும் மாலை வேலையில் ஏற்றுங்கள். இவை அனைத்திலும் விட குரு பகவானுக்கு உகந்த நாளான தினமும் இன்று தான். இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த தினத்தில் செய்யக்கூடிய இந்த தீப வழிபாடு நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும். தீபம் ஏற்றுவதற்கு முன்பாக பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு மலர் சூட்டி விடுங்கள்.

முருகனுக்கு உகந்த நட்சத்திர கோலம் இட்டு அதில் ஓம் சரவண பவ என்ற வார்த்தையை எழுதுங்கள். அதன் பிறகு ஆறு வெற்றிலை எடுத்து சுத்தம் செய்து வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஆறு அகல் விளத்தையும் சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து ஒரு தட்டில் ஆறு வெற்றிலையும் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஆறு வெற்றிலையின் மேல் ஆறு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். அவ்வாறு தீபம் ஏற்றும் போது ஓம் சரவண பவ என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் மனதிற்குள் என்ன வேண்டுதலோ அதையும் நினைத்துக் கொள்ளுங்கள். ஆறு அகல் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் ஆறு வெற்றிலை வைத்து நடுவில் ஒரே ஒரு அகல் விளக்கை வைத்து ஏற்றலாம்.

இன்றைய தினத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் உங்களுடைய அனைத்து விதமான வேண்டுதல்களையும் நிச்சயம் நிறைவேற்றித் தரும். கேட்டதை கேட்டதற்கு அருளக் கூடிய வேலவனிடம் இந்த முறையில் வேண்டினால் வேலவனே நேரில் வந்து உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தருவார்.

இதையும் படிக்கலாமே: பாவங்கள் தீர ரத சப்தமி

இத்தகைய அற்புதமான நாளே தவிர விடாமல் இந்த தீப வழிபாட்டை செய்து முருகனின் பரிபூரண அருளை பெறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -